விஜயதசமி நாளில், தனியார் பள்ளிகளை போல, அரசு பள்ளிகளிலும், மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, உத்தரவிடப் பட்டுள்ளது.நாடு முழுவதும் இன்று, விஜயதசமி நாள் கொண்டாடப் படுகிறது.இதையொட்டி, பள்ளிகளில் சிறப்பு மாணவர் சேர்க்கை நடத்தப் படுகிறது.
பல தனியார் பள்ளிகள், ப்ரீ கே.ஜி., மற்றும், எல்.கே.ஜி., வகுப்புகளில் மாணவர்களை, இன்று சேர்க்கின்றனர். இதற்காக சிறப்பு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.இந்நிலையில், அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை உயர்த்தும் வகையில், விஜயதசமி நாளில், புதிய மாணவர்களை சேர்க்குமாறு, தொடக்க கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளை, இன்று திறந்து வைத்து, புதிய மாணவர்களை சேர்க்கலாம்.
குறிப்பாக, அங்கன்வாடிகளில் உள்ள, எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகள் மற்றும் தொடக்க பள்ளிகளில் உள்ள, நர்சரி வகுப்புகளில், மாணவர்களை சேர்க்க வேண்டும் என, தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி