பிரதமர் மோடி- சீன அதிபர் ஜின்பிங் நாளை மாமல்லபுரத்தில் சந்திப்பதையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
இதன் காரணமாக பள்ளி கல்லூரி பேருந்துகள் செல்வதில் குழப்பம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக இன்று மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாமல்லபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை முதல் 3 நாட்களுக்கு விடுமுறை என்று காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையன் தெரிவித்துள்ளார். அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளுக்கு வருகிற 11, 12,13ம் நாளை முதல் 3 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Nalaiya vingyani program nadakkuma
ReplyDeleteBy Mahalakshmi teacher from Thirupoondi North Nagai