பொதுத்தேர்வில் மாற்றுத்திறனாளிக்கான சலுகைகள் பெறத் தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 22, 2019

பொதுத்தேர்வில் மாற்றுத்திறனாளிக்கான சலுகைகள் பெறத் தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!


'பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாற்றுத்திறனாளிக்கான சலுகைகள் பெறத் தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்' என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

2020 மார்ச், ஏப்ரலில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு நடக்க உள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்களின் நலன் கருதி,பிற மாணவர்கள் போல் அவர்களும் தேர்வு எழுத சிறப்பு சலுகை வழங்கப்பட உள்ளது. பொதுத் தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு உடல் குறைபாட்டின் அடிப்படையில் வழங்கப்படும் சலுகைகள் குறித்து பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர்கள் எடுத்துரைக்க வேண்டும்.விண்ணப்பிக்கலாம்உடல் குறைபாட்டின் அடிப்படையில் தேர்வு எழுத சலுகைகள் கேட்கும் மாணவர்கள்மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை நகல் அல்லது மருத்துவரின் பரிந்துரை கடிதத்தை தலைமையாசிரியர் பெற்றுக்கொள்ள வேண்டும். ஏற்கனவே 10 ம் வகுப்பில் அரசுபொதுத்தேர்வு எழுத சலுகைகள் பெற்ற ஆணையின் நகலையும் விண்ணப்பத்துடன் இணைத்து அக்.,31 க்குள் அனுப்ப வேண்டும்.

தாமதமாக விண்ணப்பங்கள் பெறும் தலைமையாசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.முதன்மை கல்வி அலுவலர்களால் பரிந்துரைக்கப்படும் பட்டியல் மட்டுமே பரிசீலிக்கப்படும். பரிந்துரையின்றி பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி