கல்வி உதவி தொகைக்கான தேர்வு அரசு அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 19, 2019

கல்வி உதவி தொகைக்கான தேர்வு அரசு அறிவிப்பு


அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் சி.உஷாராணி வெளியிட்ட செய் திக்குறிப்பு:

தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவி திட்டத்தின்கீழ் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

அதன்படி நடப்பு ஆண்டு உதவித்தொகை பெறுவதற்கு தகுதியான மாணவர்களை தேர்வு செய்வதற்காக என்எம்எம்எஸ் தேர்வு வட்டார அளவில் டிசம்பர் 1-ம் தேதி நடைபெற உள்ளது.

இதற்காக மாணவர்களிடம் இருந்து கடந்த செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 11-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.தற்போது விண்ணப்பித்த வர்களின் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக அக்டோபர் 21 முதல் 31-ம் தேதி வரை பதிவு செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, பள்ளி தலைமை ஆசிரியர்கள் தாமதமின்றி பணிகளை முடிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி