NET 2019 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 10, 2019

NET 2019 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!


UGC NET 2019: டிசம்பர் மாதம் நடைபெறும் NET Exam 2019 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே (அக்.9) கடைசி நாளாக இருந்தது. இந்நிலையில், தற்போது நெட் தேர்வு விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் அக்டோபர் 15 வரையில் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகம், கல்லூரிகளில் உதவிப்பேராசிரியர் பணியில் சேருவதற்கும், ஆராய்ச்சி படிப்பு படிப்பவர்கள் உதவித்தொகை பெறுவதற்கும் நெட் தேர்வில் (NET Exam) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வு ஒவ்வொரு ஆண்டும் இருமுறை நடத்தப்படுகிறது.

அந்தவகையில், இந்தாண்டு இரண்டாவதாக நடத்தப்படும் நெட் தேர்வு வரும் டிசம்பர் மாதம் 2, 6 ஆகிய தேதிகளில் நடத்தப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு ugcnet.nta.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 9ம் தேதி விண்ணப்பங்கள் பதிவு தொடங்கப்பட்டது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி இன்று அக்டோபர் 9ம் தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று முடிவடைதாக இருந்த நெட் தேர்வு விண்ணப்பதிவு, அக்டோபர் 15ம் தேதி வரையில் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால், நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறியவர்கள் அக்டோபர் 15ம் தேதி வரையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். காலஅவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டதற்கான தகவல் https://ugcnet.nta.nic.in இணையளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி