10ம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை தேர்வு நிறைவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 4, 2019

10ம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை தேர்வு நிறைவு


பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, கல்வி உதவித் தொகைக்கான, தேசிய திறனறி தேர்வு, நேற்று நடந்தது; 1.50 லட்சம் பேர் பங்கேற்றனர்.

பள்ளி மற்றும் கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு,பல்வேறு திட்டங்கள் வழியாக, மத்திய - மாநில அரசுகள், கல்வி உதவித் தொகை வழங்குகின்றன. இதில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஆராய்ச்சி படிப்பு வரை, கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டமும் உள்ளது. இந்த திட்டத்தில் உதவித் தொகை பெற விரும்பும் மாணவர்கள், மத்திய அரசு நடத்தும் திறனறி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.முதற்கட்டமாக, மாநில அளவில் தேர்வு நடத்தப்படும். அதில்தேர்ச்சி பெறும் மாணவர்கள், தேசிய அளவிலான தேர்வில் பங்கேற்க வேண்டும். நடப்பு கல்வி ஆண்டுக்கான, மாநில அளவிலான தேர்வு, தமிழகத்தில் நேற்று நடந்தது.

இதில், 1.55 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர்; 1.50 லட்சம் பேர் பங்கேற்றனர். காலை மற்றும் மதியம் என, இரண்டு தாள்களுக்கு தேர்வு நடந்தது. தேர்வின் வினாத்தாள்கள், கிராமப்புற மாணவர்களுக்கு கடினமாக இருந்ததாக, மாணவர்களும், ஆசிரியர்களும் தெரிவித்தனர்.

1 comment:

  1. We are urgently in need of Kidney donors with the sum of $500,000.00 USD,(3 CRORE INDIA RUPEES) All donors are to reply via Email for more details: Email: healthc976@gmail.com
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி