பள்ளி, கல்லூரிகளில் இன்று ‘தமிழ்நாடு நாள்’ தினத்தை கொண்டாட அரசு உத்தரவு  - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 1, 2019

பள்ளி, கல்லூரிகளில் இன்று ‘தமிழ்நாடு நாள்’ தினத்தை கொண்டாட அரசு உத்தரவு 

பள்ளி, கல்லூரிகளில் ‘தமிழ்நாடு நாள்’ தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்றுதமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் மொழிவாரியாக மாநிலங்களை பிரிக்க முடிவானது.

அதன்படி 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி சென்னை மாகாணத்தில் இருந்து கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா பிரிந்து தனி மாநிலங்களாக அறிவிக்கப்பட்டன. அந்த நாளை தமிழகம் உருவான தினமாக கொண்டாட தமிழறிஞர்கள் தொடர் கோரிக்கை வைத்தனர். அதையேற்று நடப்பு ஆண்டு முதல் நவம்பர் 1-ம் தேதியை தமிழ்நாடு நாளாகக் கொண்டாட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் ‘தமிழ்நாடு நாள்' இன்று (நவ.1) சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தமிழ் தொன்மை குறித்த தலைப்பில் பேச்சுப் போட்டி உட்பட சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். அவ்வாறு நடத்தப்படும் நிகழ்ச்சிகளின் புகைப்படங்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் இயக்குநரகத்துக்கு அனுப்ப வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதேபோல், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளிலும் தமிழகம் உருவான வரலாறு தொடர்பான கருத்தரங்கம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று உயர்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

1 comment:

  1. We are urgently in need of Kidney donors with the sum of $500,000.00 USD,(3 CRORE INDIA RUPEES) All donors are to reply via Email for more details: Email: healthc976@gmail.com
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி