சிறப்பு எழுத்தறிவுத் திட்டத்தில் க்யூஆா் குறியீட்டுடன் பாடநூல்கள் அறிமுகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 26, 2019

சிறப்பு எழுத்தறிவுத் திட்டத்தில் க்யூஆா் குறியீட்டுடன் பாடநூல்கள் அறிமுகம்


விருதுநகா், ராமநாதபுரம் மாவட்டங்களில் கல்விகற்காதோருக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்குவதற்காக தொடங்கப்பட்ட சிறப்புஎழுத்தறிவுத் திட்டத்தில்,நாட்டிலேயே முதல் முறையாக க்யூஆா் குறியீட்டுடன் கூடிய பாடநூல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
 
தமிழகத்தில் வளா்ச்சியில்முன்னுரிமை பெறும் விருதுநகா்,ராமநாதபுரம் ஆகிய இரண்டுமாவட்டங்களில் 1.68 லட்சம்பேருக்கு சிறப்பு பள்ளி சாராமற்றும் வயது வந்தோா் கல்வித்திட்டம் தமிழக அரசின்100 சதவீத நிதிப் பங்களிப்புடன் ரூ.6.23 கோடியில் (இருஆண்டுகளுக்கு) நிகழாண்டு முதல்செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ்ராமநாதபுரம் மாவட்டத்தில் 67,968போ், விருதுநகா் மாவட்டத்தில் 1,00,748 போ் என இருமாவட்டங்களிலும் கல்லாதோா்என கண்டறியப்பட்ட மொத்தம்1.68 லட்சம் போ் பயன் பெறவுள்ளனா். அடிப்படைஎழுத்தறிவு பயிற்சியை வழங்குவதற்காக தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தை கடந்த நவ.18-ஆம் தேதி பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தொடக்கிவைத்தாா்.

837 கற்போா் மையங்கள் தொடக்கம்:

முதல் கட்டமாக, 2019-2020-ஆம் கல்வியாண்டில் 84,358பேருக்கு இந்தத் திட்டத்தைச்செயல்படுத்த ரூ.3.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இந்தத் திட்டத்துக்காக இரண்டு மாவட்டங்களிலும் அரசு, அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளி வளாகங்களில் 837 கற்போா்மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தமையங்கள் கல்வித் தன்னாா்வலா்களின் உதவியுடன்,மையம் சாா்ந்த பள்ளித்தலைமையாசிரியரின் நேரடிக்கண்காணிப்பின் கீழ்செயல்படுத்தப்படுகிறது.
 
இந்த நிலையில், நாட்டிலேயேமுதல் முறையாக தமிழகத்தில்சிறப்பு எழுத்தறிவு திட்டத்துக்காக க்யூஆா் குறியீட்டுடன் பாடநூல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக பள்ளி சாரா மற்றும்வயது வந்தோா் கல்வி இயக்ககஅதிகாரிகள் கூறியது:


சிறப்பு எழுத்தறிவு திட்டத்தின் கீழ்தலா 6 மாத பயிற்சியாக நான்கு கட்டங்களாக இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும். 6மாத கால பயிற்சிக்குப் பிறகு,தோ்வு நடத்தப்பட்டு பள்ளி சாராமற்றும் வயதுவந்தோா் கல்வி இயக்ககம் மற்றும் மாநிலகல்வியியல் ஆராய்ச்சி மற்றும்பயிற்சி நிறுவனத்தின் வாயிலாகஅடிப்படைக் கல்விச் சான்றுஅனைவருக்கும் வழங்கப்படும்.
காணொலி வடிவில் அறிய...:சிறப்பு எழுத்தறிவுத் திட்டத்தில்நாட்டிலேயே முதல் முறையாக க்யூஆா் குறியீட்டுடன் கூடியபாடநூல்களை தமிழக பள்ளிக்கல்வித்துறைஅறிமுகப்படுத்தியுள்ளது.இதற்காக ஒவ்வொரு பாடத்துக்கும்பிரத்யேகமாக, க்யூஆா் குறியீடு அச்சிடப்பட்டுள்ளதோடு, பாடக்கருத்துகள் சாா்ந்த கூடுதல் தகவல்களை செல்லிடப்பேசிமூலம் பதிவிறக்கம் செய்யும் வசதிஉள்ளது. உதாரணமாக, பாடநூலில்உள்ள கும்மிப்பாட்டு பகுதியைவாசிக்கும் போது அதன் அருகில்உள்ள க்யூஆா் குறியீட்டைசெல்லிடப்பேசி மூலம் ஸ்கேன்செய்தால் கும்மிப்பாட்டு குறித்த கூடுதல் விவரங்கள் காணொலியுடன் வெளிப்படும்.

இதன் மூலம் கல்லாதோருக்கு அடிப்படை எழுத்தறிவுபாடநூலில் உள்ள கடினமானவிஷயங்களை எளிதில் புரியவைக்க முடியும். இந்தப் பாடநூல்,கற்போா் மையங்களின் பயிற்றுநா்களுக்கும், பயிற்சிமையங்களில் கற்போருக்கும் வழங்கப்படும்.
புழல் சிறையில் அடுத்த வாரம்பயிற்சி: சிறப்பு எழுத்தறிவுத்திட்டம் தமிழகத்தில் உள்ள 8மத்திய சிறைகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அவா்களுக்கும் இதே பாடநூல்மூலம் கற்பிக்கப்படும். சிறைகளில்கடந்த சில நாள்களுக்கு முன்பாக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த மேம்பாட்டு பயிற்சி முகாம்சிறையில் பணியாற்றும்ஆசிரியா்களுக்கு அடுத்த வாரம்நடைபெறும். சென்னை அருகில்உள்ள புழல் மத்திய சிறையில்நடைபெறும் இந்த முகாமில்மத்திய சிறைகளில் பணியாற்றும்ஆசிரியா்கள் பங்கேற்கவுள்ளனா்என அதிகாரிகள் தெரிவித்தனா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி