தவறின்றி பெயர் பட்டியல் தேர்வு துறை அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 24, 2019

தவறின்றி பெயர் பட்டியல் தேர்வு துறை அறிவிப்பு


பத்தாம் வகுப்பு பொது தேர்வில் பங்கேற்க உள்ள மாணவர்களின் பட்டியலில், பெயர் விபரங்களை தவறின்றி, தெளிவாக பதிவு செய்யும்படி, பள்ளிகளுக்கு அரசு தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, அரசு தேர்வு துறை, நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:பத்தாம் வகுப்பு பொது தேர்வு தொடர்பாக, பெயர் பட்டியல் தயாரிக்க, அரசு தேர்வு துறை சார்பில், உறுதிமொழி படிவம் வழங்கப் பட்டுள்ளது. இந்த படிவத்தில், தமிழில், 45 எழுத்துக்கள், ஆங்கிலத்தில், 34 எழுத்துக்கள் எழுதும் வகையில், இடம் தரப்பட்டுள்ளது. அதற்கு மேலும் எழுத்துக்களை பதிவு செய்ய, 'எமிஸ்' இணையதளத்தில் இட வசதி செய்யப் பட்டுள்ளது. எனவே, தவறின்றி பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி