ஆசிரியர்களுக்கு கட்டாய ஒய்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 3, 2019

ஆசிரியர்களுக்கு கட்டாய ஒய்வு


உத்தராகண்ட் அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறையக்காரணமான ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்க அம் மாநிலஅரசு முடிவு செய்துள்ளது.

உத்தரபிரதேசத்தில் இருந்து கடந்த 2000-வது ஆண்டில் பிரிந்த மாநிலம் உத்தராகண்ட். பாஜக ஆளும் மாநிலமான இது இமயமலையின் சரிவுப்பகுதியில் அமைந்துள்ளது. இதன் கடுவால் மற்றும் குமாவ்ன் மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் மாண வர்கள் தேர்ச்சி எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சரியாக பாடங்களை போதிக் காததே இதற்குக் காரணம் எனக் கருதப்படுகிறது.

மேலும் பல ஆசிரியர்கள் முன்கூட்டியே அனு மதி பெறாமல் விடுப்பு எடுப்பதால் மாற்று ஆசிரியர்களை பணியில் ஈடுபடுத்த முடியாத நிலை உள்ளதாகவும் புகார் உள்ளது.எனவே, இந்த நிலையை மாற்ற உத்தராகண்ட் மாநில பள்ளிக் கல்வித் துறை ஒரு முடிவு எடுத் துள்ளது. இதன்படி, மாணவர் களின் தேர்ச்சி விகிதம் குறையக் காரணமானவர்கள் மற்றும் முன் அனுமதியின்றி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்கப்படும். இது 50 வயது நிறை வடைந்தவர்களுக்கு மட்டும் பொருந்தும்.

இதுதொடர்பாக, அனைத்து மாவட்ட கல்வி அதிகாரி களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப் பப்பட்டுள்ளது. தேர்ச்சி விகிதம் குறையக் காரணமான ஆசிரியர் களை அடையாளம் கண்டு, வரும் 20-ம் தேதிக்குள் அறிக்கை அனுப்பு மாறு அதில் கோரப்பட்டுள்ளது.இதனிடையே, குமாவ்ன் பகுதி யில் பல மாதங்களாக பணிக்கு வராமல் தொடர்ந்து விடுப்பில் உள்ள 26 ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

உத்தராகண்டில் மொத்தம் 65,000 ஆசிரியர்கள் பள்ளிகளில் பணியாற்றி வருகின்றனர். உத்தரா கண்ட் அரசின் இந்த புதிய முடிவை எதிர்த்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட அரசு பள்ளி ஆசிரியர் சங்கங் கள் ஆலோசனை நடத்தி வருகின்றன.

1 comment:

  1. We are urgently in need of Kidney donors with the sum of $500,000.00 USD,(3 CRORE INDIA RUPEES) All donors are to reply via Email for more details: Email: healthc976@gmail.com
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி