மருத்துவ ஆய்வாளர் பதவிக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சுகாதார துறையில், மருத்துவ பணி மற்றும் சார்நிலைபணிகளில், ஆய்வாளர் மற்றும் இளநிலை பகுப்பாய்வாளர் பதவியில், 49 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்காக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில், போட்டி தேர்வு, ஜூன், 23ல் நடந்தது. இந்த தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு, 'ஆன்லைனில்' சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட உள்ளது. தேர்வர்கள் வரும், 11 முதல், 15க்குள், தமிழக அரசின், இ - சேவை மையங்கள் வாயிலாக, ஆன்லைனில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அதேபோல, போலீஸ் டி.ஜி.பி., அலுவலகத்தில், பொருளாதார வல்லுனர் மற்றும் சமூகவியலாளர் பதவியில், இரு பணியிடங்களுக்கு, ஆகஸ்ட், 24ல் தேர்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகளும், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த தகவலை, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் தெரிவித்துள்ளார்.
We are urgently in need of Kidney donors with the sum of $500,000.00 USD,(3 CRORE INDIA RUPEES) All donors are to reply via Email for more details: Email: healthc976@gmail.com
ReplyDeleteCall or whatsapp +91 9945317569