ஜனவரி 16 பிரதமர் உரை ( Pariksha Pe Charcha 2020 ) - பள்ளிக்கல்வித்துறையின் செயல்முறைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 28, 2019

ஜனவரி 16 பிரதமர் உரை ( Pariksha Pe Charcha 2020 ) - பள்ளிக்கல்வித்துறையின் செயல்முறைகள்!




மாணவர்கள் பொதுத்தேர்வை நம்பிக்கையுடனும் பயமின்றியும் எழுதும் வகையில் Pariksha Pe Charcha 2020 எனும் நிகழ்ச்சி மூலம் பாரதப் பிரதமர் அவர்கள் பள்ளி மாணவர்களுடன் 16 . 01 . 2020 அன்று புதுடில்லியில் உள்ள Talkatora ஸ்டேடியத்தில் உரையாற்றவுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவிக்கப்பட்டதற்கிணங்க , பார்வை ( 3 ) ல் காணும் கடிதம் மூலம் பள்ளி மாணாக்கர்கள் கட்டுரைகளை இணையதள வழியில் சமர்ப்பித்திட அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது .

இதனைத் தொடர்ந்து மேற்குறிப்பிட்ட 16 . 01 . 2020 அன்று புதுடில்லியில் உள்ள Talkatora ஸ்டேடியத்தில் பாரதப் பிரதமர் அவர்கள் உரையாற்றவுள்ளதை அனைத்து தூர்தர்ஷன் மற்றும் வானொலி மூலம் நேரடியாக ஒளிப்பரப்பப்பட உள்ளது . இதனை பிரதம மந்திரி அலுவலக இணையதளங்கள் தவிர்த்து தகவல் தொழில் நுட்பத்தில் நேரலை தளங்களான Youtube Channel of MHRD . Mygov . in , Facebook Live and Swayamprabha Channels of MHRD மூலமும் காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . தற்போது ஏறக்குறைய அனைத்து வகைப் பள்ளிகளும் தொலைக்காட்சி சாதனம் மற்றும் மின் இணைப்பு வசதி பெற்றுள்ள நிலையில் , 9 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ / மாணவியர்கள் இந்நிகழ்ச்சியினை தவறாது காணும் பொருட்டும் / கேட்கும் பொருட்டும் தொலைக்காட்சிபெட்டி மற்றும் இதர சாதனங்கள் பழுது நீக்கம் செய்தும் , அன்றைய நாள் முழுவதும் தொடர்

மின் விநியோகம் பெறும் பொருட்டு செயனரேட்டர் / கன்வெர்ட்டர் ( Generailors / Inverlers ) வசதிகளை செய்து கொள்ள Sanmigr : : Shiksha வின் திட்ட நிதியினை பயன்படுத்துமாறும் , இந்நிகழ்ச்சி குறித்த பின்னூட்டம் ( Icellhick ) அவிக்குமாறும் அனைத்து udraத் தலைமையாசிரியர்களுக்கும் சுற்றறிக்கை மூலம் தெரிவிக்குமாறும் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

அனைத்து பள்ளி மாணவ ! மாணவியர்களும் தவறாது மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சியை காண்பது / கேட்பது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யுமாறும் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி