மாதம்தோறும் 20 பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 28, 2019

மாதம்தோறும் 20 பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவு


ஒவ்வொரு வட்டார கல்வி அலுவலரும், மாதம்தோறும், 20 பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்' என, தொடக்க கல்வி இயக்குநர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்களுக்கு, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
அரசு பள்ளிகளின் தரத்தையும், உள்கட்டமைப்பு வசதியையும் உயர்த்தும் வகையில், பள்ளிகளில் திடீர் ஆய்வை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். வட்டார கல்வி அலுவலர்கள், தொடக்க நடுநிலை பள்ளிகளில் திடீர் ஆய்வும், ஆண்டு ஆய்வும் மேற்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு மாதமும், குறைந்தபட்சம், 20 பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அப்போது, தலைமை ஆசிரியர்கள், மற்ற ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்காமல், திடீரென ஆய்வுக்கு செல்ல வேண்டும்.

அப்போது, பள்ளிகள் இயங்கும் முறை, பாடம் நடத்தும் விதம், பள்ளி செயல்பாடு, வருகைப்பதிவு விபரம், நலத் திட்ட செயல்பாடு, மாணவர்களின் கற்றல் திறன் போன்றவற்றை, ஆய்வு செய்ய வேண்டும்.ஆசிரியர்களின் கற்பித்தல் திறன், கணினி வழியாக கற்று தருதல், உடற்கல்வி, யோகா வகுப்புகள் குறித்து, மாணவர்களிடம் நேரடியாக தெரிந்து கொள்ள வேண்டும். ஆங்கில பயிற்சி குறித்த விபரங்களையும் தெரிந்து, உயர் அதிகாரிகளிடம் அறிக்கை அளிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி