பள்ளிகளை முன் அறிவிப்பின்றி பார்வையிடும்போது ஒரு பள்ளியில் குறைந்தது 2 மணி நேரம் இருத்தல் வேண்டும் - இயக்குநர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 27, 2019

பள்ளிகளை முன் அறிவிப்பின்றி பார்வையிடும்போது ஒரு பள்ளியில் குறைந்தது 2 மணி நேரம் இருத்தல் வேண்டும் - இயக்குநர் உத்தரவு.


தொடக்கக் கல்வி - கற்றல் கற்பித்தல் பணி - வட்டாரக் கல்விஅலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் .

பள்ளிகள் பார்வை (School Visits) ஆண்டாய்வு (Annual Inspection) தொடர்பாக அறிவுரைகள்வழங்குதல்-சார்ந்து. அரசாணை நிலை எண் பள்ளிக் கல்விபட்ஜெட் 1) துறை, நாள் 18.05.2018 பார்வையில் குறிப்பிடப்பட்டுள்ள அரசாணையில் ஊராட்சி ஒன்றிய /நகராட்சி / அரசு/ அரசு உதவி பெறும் தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் அடைவுத் திறனை மேம்படுத்திட வட்டாரக் கல்விஅலுவலர்கள் (BEOS) பள்ளிகளை முன்னறிவிப்பின்றி பார்வையிடுதல் மற்றும்ஆண்டாய்வு செய்வதை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் (CEOS)உறுதி செய்திட ஆணையிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் (BEOS) பள்ளிகளில்பயிலும் மாணவர்களின் கற்றல் அடைவுத் திறன், ஆசிரியர்களின் கற்பித்தல்திறன், நலத்திட்டங்கள் செயல்படுத்துதல், பள்ளி சுற்றுப்புறச் சூழல் ஆகியவைசிறந்து விளங்கிடப் பள்ளிகளை முன்னறிவிப்பின்றி பார்வையிடுதல் (SurpriseVisit) மற்றும் ஆண்டாய்வு செய்தல் (Annual Inspection) மிகவும் அவசியமாகும்.எனவே பள்ளிகள் முன்னறிவிப்பின்றி பார்வையிடுதல், ஆண்டாய்வு மேற்கொள்ளும் போது கீழ்க்கண்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறுஅறிவுறுத்தப்படுகிறது.

1 வட்டாரக் கல்வி அலுவலர்கள் பள்ளி முன் அறிவிப்பின்றிபார்வையின்போது காலை வழிபாட்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழ்த்தாய்வாழ்த்து, தேசியக் கொடி ஏற்றுதல், கொடிப் பாட்டு, உறுதிமொழி,திருக்குறள் வாசித்தல், தலைப்புச் செய்திகள் வாசித்தல்,பொதுஅறிவு செய்தி தெரிவித்தல், ஆசிரியர் அறநெறி உரை மற்றும்நாட்டுப்பண் பாடுதல் போன்றவை இடம்பெறுதலை உறுதி செய்தல்வேண்டும்.

2.வட்டாரக் கல்வி அலுவலர்கள் பள்ளிகளை முன் அறிவிப்பின்றி பார்வையிடும்போது ஒரு பள்ளியில் குறைந்தது 2 மணி நேரம் இருத்தல் வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி