
பள்ளிக்கல்வித்துறையில் முதன்முறையாக நியமிக்கப்பட்டுள்ள ஆணையர் இன்று முதல் தமிழகம் முழுவதும் மண்டல அளவில் கல்வித்தரத்தை உயர்த்துவது குறித்து நேரில் ஆய்வு மேற்கொள்கிறார். தமிழகத்தில் பள்ளிக் கல்வி இயக்ககத்தின்கீழ் 37 ஆயிரத்து 211 அரசு பள்ளிகளும், 8 ஆயிரத்து 357 அரசு உதவி பெறும் பள்ளிகளும், 12 ஆயிரத்து 419 தனியார் பள்ளிகளும் உள்ளன.
இதில் 32 முதன்மைக்கல்வி அலுவலர்கள், 117 மாவட்ட கல்வி அலுவலர்கள், 413 வட்டார கல்வி அலுவலர்கள் உள்ளனர். இவர்களுக்கு மேல் இயக்குனர்கள் மற்றும் ஐஏஎஸ் அந்தஸ்தில் முதன்மை செயலாளர் உள்ளனர். பள்ளிக் கல்வியில் நிர்வாக ரீதியாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
அதன்படி துறை இயக்குநர்களைக் கண்காணிக்க பள்ளிக்கல்வி ஆணையர் என்ற பதவி அண்மையில் புதிதாக உருவாக்கப்பட்டது. புதிய ஆணையராக சிஜி தாமஸ் வைத்தியன் நியமிக்கப்பட்டார். இவர், கல்வித்தரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன்படி, தமிழகம் முழுவதும் மண்டல வாரியாக சென்று கல்வித்தர மேம்பாடு குறித்து ஆலோசிக்க உள்ளார்.
இன்று (9ம் தேதி) முதல் 19ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த ஆலோசனை நிகழ்வில் அந்தந்த மண்டல முதன்மைக் கல்வி அலுவலர்கள், கல்வி மாவட்ட அலுவலர்கள் மற்றும் தேர்வு செய்யப்பட்ட 20 தலைமையாசிரியர்கள், 20 ஆசிரியர்கள் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்.
முதல்கட்டமாக இன்று கோவையில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்ட அளவில் ஆலோசனை நடத்துகிறார். பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை ஆலோசனை நடக்க உள்ளது. ஆலோசனையில் மாணவர்களின் கல்வித்திறன், பயிற்றுவித்தல் முறை, இவற்றை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கல்வி வளர்ச்சி குறித்து கருத்துக்களை கேட்டு கலந்துரையாட உள்ளார்.
தொடர்ந்து நாளை 10ம் தேதி சேலம் மண்டல அளவில் சேலத்திலும், 11ம் தேதி விழுப்புரம் மண்டலத்திலும், 12ம் தேதி சென்னை மண்டல அளவில் சென்னையிலும், 13ம் தேதி திருச்சி மண்டலத்திற்கு திருச்சியிலும், 16ம் தேதி நெல்லை மண்டல அளவில் நெல்லையிலும், 17ம் தேதி மதுரை மண்டலத்திற்கு மதுரையிலும், 18ம் தேதி தஞ்சை மண்டலத்திற்கு தஞ்சையிலும், 19ம் தேதி திருவண்ணாமலை மண்டலத்திற்கு திருவண்ணாமலையிலும் ஆய்வு நடத்த உள்ளார்.
சென்னையில் மட்டும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை ஆலோசனை நடக்கிறது.கூட்டத்தில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களின் விவரங்களை commissionersedu@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு உடனே அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர ஆணையர் சுற்றுப்பயணத்தின்போது பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள வாய்ப்புள்ளதால் போதிய முன்னேற்பாட்டுடன் தயாராக இருக்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி