தேர்வின் போது பள்ளிகளில் கடைபிடிக்கவேண்டிய நெறிமுறைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 17, 2019

தேர்வின் போது பள்ளிகளில் கடைபிடிக்கவேண்டிய நெறிமுறைகள்!


தற்போது அனைத்துப் பள்ளிகளிலும் அரையாண்டுப் பொதுத் தேர்வு நடைபெற்றுவருகிறது . தேர்வின் போது கடைபிடிக்கவேண்டிய நெறிமுறைகள் பின்வருவாறு

# 10 , 11 , மற்றும் 12 ம் வகுப்பு பொதுத் தேர்வினை நடத்துவதைப்போல , அனைத்து வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வினையும் , தொடக்கப் பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை தனித்தனி அறைகளில் ( அறைக்கு 20 மாணவர்கள் என்ற விகிதத்தில் ) முழு கண்காணிப்புடனும் , எவ்வித புகாருக்கும் இடமளிக்காமலும் நடத்தவேண்டும் .

# அனைத்து வகுப்பு மாணவர்களும் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் .

# தேர்வுப்பணியில் இல்லாத ஆசிரியர்கள் , தேர்வு இல்லாத மாணவர்களை அடுத்த தேர்விற்கு தயார் செய்தல் வேண்டும் .

# தேர்வு அறைக்கு எக்காரணத்தைக் கொண்டும் ஆசிரியர்கள் கைப்பேசி கொண்டு செல்லுதல் கூடாது . அவ்வாறு ஆசிரியர்கள் கைப்பேசியுடன் அறைக்கண்காணிப்பு பணியை மேற்கொள்வது கண்டறிப்பட்டால் அதற்கு தலைமையாசிரியரே முழு பொறுபேற்க வேண்டும் .

# வட்டாரக் கல்வி அலுவலர்கள் / குறுவளமைய தலைமையாசிரியர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் அரையாண்டுப் பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகளை பார்வையிட்டு எவ்வித புகாருக்கும் இடமின்றி தேர்வு நடைபெறுவதை உறுதி செய்யக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

# மாவட்டக் கல்வி அலுவலர்கள் தேர்வு மையங்களை பார்வையிட்டு இவ்வலுவலகத்திற்கு அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி