மாணவர்கள் உடற்பயிற்சிக்கு தினமும் ஒரு மணி நேரம் ஒதுக்கவேண்டும் - ஜனவரி முதல் அமல்படுத்த பல்கலைக்கழக மானியக்குழு அறிவிப்பு ! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 17, 2019

மாணவர்கள் உடற்பயிற்சிக்கு தினமும் ஒரு மணி நேரம் ஒதுக்கவேண்டும் - ஜனவரி முதல் அமல்படுத்த பல்கலைக்கழக மானியக்குழு அறிவிப்பு !


நாட்டு மக்கள் உடல்நலனை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதை வலியுறுத்தி ' திறன் இந்தியா இயக்கம் ' என்ற திட்டத்தை பிரத ' மர் நரேந்திர மோடி சமீபத்தில் தொடங்கிவைத்தார் . அதன்படி , - அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் அடுத்த மாதம் ( ஜன ) வரி ) முதல் மாணவர்கள் உடற்பயிற்சிக்கு தினமும் 45 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் ஒதுக்க வேண்டும் என்றும் , அதற்கேற்ப பாடவேளைகளை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் பல்க தி லைக்கழக மானியக்குழு ( யு . ஜி . சி . ) உத்தரவிட்டு இருக்கிறது .

உடற்பயிற்சிக்காக ஒதுக்கப்படும் அந்த நேரத்தில் ஓடுதல் , யோகா , நீச்சல் உள்பட ஏதாவது ஒரு விளையாட்டை கல்வி | நிறுவனங்கள் தேர்வு செய்து , மாணவர்களை அதில் உட்படுத்த | வேண்டும் . அதற்கென்று தனியாக ஒரு மையத்தை அமைத்து , ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் கல்லூரி அளவிலான விளை த யாட்டு போட்டிகளை நடத்த வேண்டும் . மாநில , தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளிலும் மாணவர்கள் பங்கேற்பதை உயர்கல்வி நிறுவனங்கள் ஊக்கப்படுத்த வேண்டும் . இதை விரைந்து அமல்படுத்திட வேண்டும் . மேற்கண்ட தகவல் பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி