இலவச சைக்கிளில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்து கொள்ளுமாறு, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், பிளஸ் 1 மாணவர்களுக்கு, அரசின் சார்பில், இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது. இந்த கல்வி ஆண்டில் படிப்பவர்களுக்கு, இலவச சைக்கிள் வழங்க, பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை மேற்கொண்டுஉள்ளது.
இதற்காக, பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சைக்கிளில் உள்ள வசதிகள், அதன் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் கூறப்பட்டு உள்ளன. மாணவியருக்கான சைக்கிளில், முன்னால் இரும்பு வலையால் ஆன கூடை; சைக்கிள் சக்கரத்தில் ஆடை சிக்காமல் இருக்க, தடுப்பு வசதிகள் இருக்கிறதா என, பார்க்க வேண்டும். ஒவ்வொரு சைக்கிளிலும், அதற்கான உத்தரவாத அட்டை இருக்கிறதா என அறிந்து, அதையும் மறக்காமல் பெற்றுக் கொள்ள வேண்டும் என, அதில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி