நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா, நவோதயா மற்றும் திபெத்திய பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பாடம் எடுக்க விரும்பும் ஆசிரியர்களுக்கு மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு (‘சிடெட்’) ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த தேர்வை சி.பி.எஸ்.இ. நிர்வாகம் நடத்துகிறது.20 மொழிகளில் நடைபெறும் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு இந்த ஆண்டு கடந்த 8-ந்தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்டது. 110 நகரங்களில் 2 ஆயிரத்து 935 மையங்களில் 2 தாள்களாக தேர்வு நடந்தது. இந்த தேர்வுக்கு மொத்தம் 28 லட்சத்து 32 ஆயிரத்து 120 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 24 லட்சத்து 5 ஆயிரத்து 145 பேர் தேர்வு எழுதினார்கள்.அதில் முதல் தாள் தேர்வை 14 லட்சத்து 13 ஆயிரத்து 390பேரும், 2-ம் தாள் தேர்வை 9 லட்சத்து 91 ஆயிரத்து 755 பேரும் எழுதியது குறிப்பிடத்தக்கது. தேர்வு எழுதியவர்களுக்கான முடிவு நேற்று வெளியிடப்பட்டது.தேர்வு எழுதிய 24 லட்சத்து 5 ஆயிரத்து 145 பேரில், 5 லட்சத்து 42 ஆயிரத்து 285 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்று இருக்கின்றனர்.
இதில் ஆண் தேர்வர்கள் 2 லட்சத்து 29 ஆயிரத்து 718, பெண் தேர்வர்கள் 3 லட்சத்து 12 ஆயிரத்து 558, திருநங்கைகள் 9 பேர் அடங்குவார்கள். தேர்ச்சி சதவீதம் 22.55 ஆகும். தேர்வு நடைபெற்று முடிந்த 19-வது நாளில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது இதுதான் முதல் முறை என்று சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது.
இத pass பண்ணி என்ன செய்ய
ReplyDeleteKv trb and navodaya tgt prt exam eluthalam.. anga ctet+trb+interview vechu than edukuranga... Two years once
Deleteபோஸ்டிங் போடுற எக்ஸாம்லாம் நம்மால பாஸ் பண்ண முடியாது. நாம பாஸ் பண்ற எக்ஸாமுக்கு போஸ்டிங் போட மாட்டாங்க. இதான் சார் வாழ்க்கை.
ReplyDeleteTN tet19-paper1- இல் பாஸ் ஆணவர்கள் இதுவரைக்கும் கவுன்சிலிங் கூப்படவவில்லய் 10 நல்ல கூப்புடுறதா மினிஸ்ட்டர் சொன்னாரு இதுவரைக்கும் கூப்படவில்லை அட்மின் இதுசம்பந்தமாக்க ஏதாவது நியூஸ் போடுங்க அல்லது மினிஸ்ட்டர் கிட்ட கேளுங்கள்
ReplyDelete2017 la Tet pass pannavangalukke innum CV nadakala. Ungalukku enna avasaram. Porumaiya irunga.
DeleteIf in ctet get 102 mks .then what please
ReplyDelete