TNPSC - 'குரூப் - 1' நேர்முக தேர்வில் முறைகேடு நடக்காது; டி.என்.பி.எஸ்.சி.,திட்டவட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 12, 2019

TNPSC - 'குரூப் - 1' நேர்முக தேர்வில் முறைகேடு நடக்காது; டி.என்.பி.எஸ்.சி.,திட்டவட்டம்


'குரூப் - 1' பதவிக்கான நேர்முக தேர்வில் முறைகேடு நடக்காது' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

குரூப் - 1 பதவிகளுக்கான, 181 காலியிடங்களுக்கு, இந்த ஆண்டு மார்ச், 3ல் முதல்நிலை தேர்வு நடந்தது. அதில், 2.29 லட்சம் பேர் பங்கேற்றனர். இதில் தேர்ச்சி பெற்ற, 9,442 பேருக்கு, ஜூலை, 12 முதல், 14 வரை பிரதான தேர்வு நடந்தது.இதில் தேர்ச்சி பெற்ற, 363 பேரின் விபரங்கள், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில், இரு தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டன. தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு, வரும், 23 முதல், 31ம் தேதி வரை நடக்க உள்ளது.இந்நிலையில், நேர்முகதேர்வில் பென்சிலால்மதிப்பெண்களைகுறிக்க,தேர்வாணைய உறுப்பினர்களுக்கு அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ குற்றம் சாட்டினார்.

இதற்கு விளக்கமளித்து,டி.என்.பி.எஸ்.சி., செயலர்நந்தகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

எந்த நேர்முக தேர்விலும், மதிப்பெண்களை பென்சிலால் குறிக்கும் வழக்கம், டி.என்.பி.எஸ்.சி.,யின் நடைமுறையில் எப்போதும் இல்லை.நேர்முகத் தேர்வில், தேர்வருக்கு வழங்கப்படும் மதிப்பெண், வல்லுநர் குழுவால் ஆலோசிக்கப்பட்டு, ஒருமித்த முடிவாக மட்டுமே வழங்கப்படும்.இந்த மதிப்பெண், கணினி வழியே மதிப்பீடு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட குறியீட்டு தாளில், பேனா மையால் மட்டுமே பதிவு செய்யப்படுகிறது. இது குறித்து, தேர்வர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி