தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்களுக்கு 08.08.2019 முதல் 31.12.2021 வரை தொடர் நீட்டிப்பு வழங்குதல் ஆணை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 21, 2020

தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்களுக்கு 08.08.2019 முதல் 31.12.2021 வரை தொடர் நீட்டிப்பு வழங்குதல் ஆணை வெளியீடு.


பள்ளிக் கல்வி - 2018 - 2019 - ஆம் கல்வியாண்டில் தரமுயர்த்தப்பட்ட 95 ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிகளில் மற்றும் 5 அரசு மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து தோற்றுவிக்கப்பட்ட 5 அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளிகளில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட 100 உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்களுக்கு 08.08.2019 முதல் 31.12.2021 வரை தொடர் நீட்டிப்பு வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது .


ஆணை :

1. மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் , 2018 - 2019 - ம் கல்வியாண்டில் 95 ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளை அரசு உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியும் மற்றும் 5 அரசு மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து 5 அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளிகளை தோற்றுவித்தும் மற்றும் இப்பள்ளிகளுக்கென 100 தலைமையாசிரியர் பணியிடங்களை தரம் உயர்த்தப்படும் நடுநிலைப் பள்ளிக்கான தலைமையாசிரியர் பணியிடங்களை நிலை உயர்த்தி உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களாக ( புதிய ஊதிய நிலை 16 - ரூ . 36 , 400 - 115700 / - ) அனுமதித்தும் , மேலும் , இப்பள்ளிகளுக்கென 500 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ( ஊதிய நிலை 13 - ரூ . 35 , 900 - 113500 ) புதிதாக தோற்றுவித்தும் அப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தரம் உயர்த்தப்படும் நடுநிலைப் பள்ளிகளில் ஏற்கனவே பணிபுரியும் 300 பட்டதாரி ஆசிரியர்களை ஈர்த்துக் கொண்டும் , மீதமுள்ள 200 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பணியிடங்களுடன் பணிநிரவல் மூலம் நிரப்ப அனுமதி வழங்கியும் ஆணை வெளியிடப்பட்டுள்ளது ; மற்றும் இரண்டாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் , முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையின் இணைப்பு - 1க்கு சில திருத்தங்கள் செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது .

2 . மேலே மூன்றாவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில் , மேலே படிக்கப்பட்ட அரசாணைகளின்படி , 2018 - 2019 - ம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளில் தோற்றுவிக்கப்பட்ட 100 உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் இப்பணியிடங்கள் ஒப்பளிக்கப்பட்டு ஒர் ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு , 08 . 08 . 2019 முதல் 31 . 12 . 2021 வரை மேலும் மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு செய்து ஆணை வழங்குமாறு பள்ளிக் கல்வி இயக்குநர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார் .

3 . மேற்காண் பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவினை அரசு கவனமுடன் பரிசீலனை செய்து , மேலே படிக்கப்பட்ட அரசாணைகளின்படி 2018 - 19 - ஆம் கல்வியாண்டில் நிலை உயர்த்தப்பட்ட 100 அரசு உயர்நிலைப்பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட ( இவ்வாணையின் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு ) 100 உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் ( ரூ . 36 , 400 1 , 15 , 700 - நிலை - 16 ) பணியிடங்களுக்கு 08 . 08 . 2019 முதல் 31 . 12 . 2021 வரை மூன்றாண்டுகளுக்கு அல்லது தற்காலிக பணியிடங்களுக்கான தேவை குறித்து நிதித்துறையின் மறு ஆய்வில் முடிவெடுக்கும் வரை இவற்றுள் எது முன்னரோ அதுவரை தொடர் நீட்டிப்பு வழங்கி அரசு ஆணையிடுகிறது .

4 . மேலே பத்தி 3 - ல் பணியிட தொடர் நீட்டிப்பு அனுமதிக்கப்பட்டுள்ள 100 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் செலவினம் பின்வரும் கணக்குத் தலைப்புகளின்கீழ் பற்று வைக்கப்பட வேண்டும்.

1 comment:

  1. Admin sir pse ask
    When will Give permission for govt aided school BT Post

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி