பள்ளி மேலாண்மைக் குழு பயிற்சி - முன்திட்ட விழிப்புணர்வு பேரணி 21.01.2020 அன்று நடத்த CEO உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 19, 2020

பள்ளி மேலாண்மைக் குழு பயிற்சி - முன்திட்ட விழிப்புணர்வு பேரணி 21.01.2020 அன்று நடத்த CEO உத்தரவு.



பள்ளி மேலாண்மைக் குழு - விழிப்புணர்வு பேரணி 

2019 - 20 ஆம் ஆண்டிற்கான பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி நடைபெறவுள்ளது . எனவே இப்பயிற்சி குறித்த விழிப்புணர்வு பேரணி ஒன்றினை மேற்கொள்ள சார்ந்த வட்டார கல்வி அலுவலர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ( பொ ) , வட்டார பள்ளி மேலாண்மைக் குழு ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

குறிப்பு -

1 . விழிப்புணர்வு பேரணி நடைபெறும் நாள் - 21 . 01 . 2020 , அன்று காலை 9 . 00 மணியளவில்

2 . விழிப்புணர்வு பேரணி அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள மாணவ மாணவியர்களைக் கொண்டு நடைபெறுதல் வேண்டும் .

3 . மாணவர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்தும் , பொது மக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி பேரணி மேற்கொள்ளுதல் வேண்டும் .

4 . தேசிய நெடுஞ்சாலை , மாநில சாலைகள் போன்ற போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளில் விழிப்புணர்வு பேரணி நடத்துவதை தவிர்த்தல் வேண்டும் .

5 . குறிப்பாக குடியிருப்பு பகுதிகளில் விழிப்புணர்வு பேரணி மேற்கொள்ளுதல் வேண்டும் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி