ஒரேநாளில் விடுப்பு எடுக்கும் 5 லட்சம் ஆசிரியர்கள்!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 4, 2020

ஒரேநாளில் விடுப்பு எடுக்கும் 5 லட்சம் ஆசிரியர்கள்!!


உத்தரப்பிரதேச மாநில அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள் 5 லட்சம் பேர் வருகிற ஜனவரி 21ம் தேதி பொது விடுப்பு எடுக்க உள்ளனர்.

உத்தரப்பிரதேச அரசு ஆசிரியர்கள் சங்கம் தங்கள் உறுப்பினர்களுக்கு சிறந்த உள்கட்டமைப்பு, ஓய்வூதியம் உள்ளிட்ட வசதிகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தவுள்ளது. இதற்காக அங்குள்ள அரசுத் தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இதன்படி, தொடக்க மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 5 லட்சம் பேர் ஜனவரி 21ம் தேதி விடுப்பு எடுப்பார்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச பிரதாமிக் சிக்ஷா ஆசிரியர் சங்கத்தின் தலைவர் தினேஷ் சந்திர ஷர்மா இதுகுறித்து கூறுகையில், "அரசுப்பள்ளிகளில் மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறைவாகவே உள்ளது.

ஆசிரியர்களுக்கு சம அளவில் ஊதியம் வழங்கப்படுவதில்லை. ஆசிரியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்கனவே அரசுக்கு வைத்தும் அவர்கள் அதனை கண்டுகொள்ளவில்லை.

எனவே, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பிரச்னைகள் குறித்து மாநில அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக நவம்பர் 21ஆம் தேதி லக்னோவில் மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

அதன் எதிரொலியாக அரசு எங்களுக்கு உத்தரவாதம் அளித்தது. ஆனால், இதுவரை எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எங்களது பிரச்னைகள் குறித்து கவலைப்படுவதாகத் தெரியவில்லை' என்று கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி