பொங்கல் விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 20, 2020

பொங்கல் விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு


பொங்கல் பண்டிகைக்கான ஐந்து நாள் தொடர் விடுமுறை முடிந்து, இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வெகு விமர்சையாக கொண்டாடப் பட்டுள்ளது.

பெரு நகரங்களில் வசிப்பவர்கள், வெளியூர்களில் வசிப்பவர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று, பொங்கலைசிறப்பாக கொண்டாடி உள்ளனர்.இதற்காக, அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு, ஜனவரி 15 முதல், நேற்றுவரை, ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த விடுமுறை நேற்று முடிந்த நிலையில், பள்ளி, கல்லுாரிகள் இன்று மீண்டும் திறக்கப் படுகின்றன.

இந்நிலையில், இன்று முதல், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான பொது தேர்வு மாணவர்களுக்கு, திருப்புதல் தேர்வுகளை நடத்த வேண்டும் என்றும், மற்ற வகுப்புகளுக்கு மூன்றாம் பருவ தேர்வுகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், பள்ளிகளுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி