குடியரசு தினவிழாவில் பள்ளிக்கு வராத தலைமையாசிரியர் மற்றும் உதவி ஆசிரியர் சஸ்பெண்ட்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 27, 2020

குடியரசு தினவிழாவில் பள்ளிக்கு வராத தலைமையாசிரியர் மற்றும் உதவி ஆசிரியர் சஸ்பெண்ட்!


துாத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே புதுார் ஒன்றியம், எஸ்.குமாரபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியராக ராஜா, ஆசிரியையாக பாக்கியசெல்வி பணியாற்றுகின்றனர்.

நேற்று காலை இருவரும் பள்ளியில் குடியரசு தினவிழாவிற்கு வரவில்லை. மாணவர்கள் வந்து காத்திருந்தனர்.நேற்று அந்த பள்ளியில் ரூ 14.50 லட்சத்தில் கட்டப்பட உள்ள புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு பகல் 11:30 மணிக்கு விளாத்திகுளம் எம்.எல்.ஏ.,சின்னப்பன் மற்றும் ஒன்றிய அதிகாரிகள் வந்தனர்.

அதுவரை பள்ளியில் தேசிய கொடியேற்றப்படாமல் இருப்பதை அறிந்த எம்.எல்.ஏ., சின்னப்பன், கல்வித்துறை அதிகாரிகளிடம் போன் செய்து ஆசிரியர்கள் வராதது குறித்து தெரிவித்தர். பின்னர் அவரே பள்ளியில் தேசிய கொடியேற்றி வைத்தார்.

புதிய கட்டட அடிக்கல் விழாவிலும் பங்கேற்று திரும்பினார்.பள்ளி குடியரசு தின விழாவில் பங்கேற்காத தலைமையாசிரியர் ராஜா, ஆசிரியர் பாக்கியசெல்வி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து கோவில்பட்டி கல்வி அலுவலர் மாரியப்பன் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி