TNPSC - குரூப் 1,2 தேர்விலும் பெரும் முறைகேடு? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 25, 2020

TNPSC - குரூப் 1,2 தேர்விலும் பெரும் முறைகேடு?


டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வை தொடர்ந்து, குரூப் 1,2 தேர்விலும் பெரும் முறைகேடு நடைபெற்றிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. முறைகேடாக வெற்றி பெற்ற பலர் அரசு பணியில் சேர்ந்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளதால் விரைவில் மேலும் சிலர் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறை அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். இதுதொடர்பாக பிடிபட்ட தாசில்தார்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றது. டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் ஏற்பட்டிருக்கின்ற முறைகேடு அம்பலமாகி இருப்பதன் காரணமாக இதற்கு முன்பாக நடைபெற்ற குரூப் 1 மற்றும் 2 தேர்விலும் கூட முறைகேடுகள் நடைபெற்றிருப்பதற்கான சந்தேகங்கள் எழுந்துள்ளது. இதில் ஒரு வினாத்தாள் 12 லட்சம் வரையிலும் விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகவே இந்த முறைகேட்டின் அடிப்படையில் தேர்வானவர்கள் பல்வேறு அரசு பொறுப்புகளில் இருக்கலாம் என்ற சந்தேகங்களும் கேள்விகளும் எழுப்பப்பட்டிருக்கிறது. இதன் அடிப்படையில் அடுத்தகட்டமாக விசாரணை நடைபெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் அழியக்கூடிய மையால் எழுதி முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்களுக்கு வாழ்நாள் தடையானது விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் குரூப் 4 தேர்வானது நடைபெற்றுள்ளது. இதில் ராமநாதபுரம், கீழக்கரையில் 100 இடங்களில் பிற மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தேர்வெழுதியுள்ளனர். தொடர்ந்து, இவர்கள் முறைகேடாக தேர்வு எழுதியிருப்பார்களா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களுக்கு மறு தேர்வானது நடைபெற்றிருக்கிறது. அதில் சரியான பதில் அளிக்காததன் காரணமாக பல்வேறு சந்தேகங்கள் டி.என்.பி.எஸ்.சிக்கு ஏற்பட்டிருக்கிறது. இதன் அடிப்படையிலே நடைபெற்ற விசாரணையில் 100 பேர் கொண்ட தரவரிசை பட்டியலில் தேர்வாகியுள்ளவர்கள் முறைகேடாக தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பதும் தெரியவந்தது.

அதாவது அழியக்கூடிய மையில் அவர்கள் தேர்வு எழுதியிருக்கிறார்கள். இதற்கு இடைத்தரகர்கள் மற்றும் அரசு ஊழியர்களும் உடந்தையாக இருந்திருக்கிறார்கள். இதையடுத்து,  போது 3 இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டு, 2 தாசில்தார்களிடம் விசாரணையானது தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பாக 2017 - 2018ம் ஆண்டுகளிலும் குரூப் 2A என்ற நேர்முக தேர்விலும் மற்றும் பல்வேறு தேர்வுகளில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக கூட புகார்கள் எழுந்திருக்கிறது. அதன் அடிப்படையில் டி.என்.பி.எஸ்.சி இதற்கு முன்பாக நடைபெற்ற குரூப் 1, 2 தேர்வுகள் எழுதப்பட்டிருப்பதில் முறைகேடு இருக்கிறதா? என்பதற்கான அடுத்தகட்ட விசாரணையை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றிருக்கிறது. இதில் ஒரு வினாத்தாள் 12 லட்சம் வரையிலும் விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

19 comments:

  1. Appadiyaeeeee trb pakkamum kandippa ponga....niraya peru maattuvatharkku vaippu irukku.....

    ReplyDelete
    Replies
    1. Vaaippu nu solradha vida... Confirm aa irukkunu sollalaam bro...

      Delete
    2. Vaaippu nu solradha vida... Confirm aa irukkunu sollalaam bro...

      Delete
    3. TRB யும் திருட்டு கும்பல் தான்

      Delete
    4. ஆனா ஆயிரக்கணக்கில் கஷ்டப்பட்டு படித்து வெற்றிபெ ற்றுள்ளனர் சபீர் நீ எத்தனை மார்க் எடுத்தாய் என்பது எனக்கு தெரியும்

      Delete
    5. Special teacher trb physical education in 1st 100 person in 37people Salem area others below 10%each area some continues no selected

      Delete
  2. Reexam will be conducted by tnpsc

    ReplyDelete
    Replies
    1. நீ பாஸ் பண்ற வரை அதை த்தான் செ ால்லுவ

      Delete
    2. நீ பாஸ் பண்ற வரை அதை த்தான் செ ால்லுவ

      Delete
  3. Re exam will be conducted by tnpsc

    ReplyDelete
    Replies
    1. படித்து வெற்றி பெற்றவன் நிலைமை தயவு செய்து தவறுசெ ய்தவனை கண்டுபிடியுங்கள்

      Delete
    2. படித்து வெற்றி பெற்றவன் நிலைமை தயவு செய்து தவறுசெ ய்தவனை கண்டுபிடியுங்கள்

      Delete
  4. பணம் பத்தும் செய்யும் ; பணம் பாதாளம் வரை பாயும் ! இதை நான் 1983 ஜூன் முதல் 1992 வரை பார்த்து இருக்கிறேன்.

    ReplyDelete
  5. Replies
    1. ஆயிரக்கணக்கான ஏழைகள் படித்து வெற்றி பெற்றுள்ளனர் நல்ல விசயத்தை தேடுங்கள்

      Delete
    2. ஆயிரக்கணக்கான ஏழைகள் படித்து வெற்றி பெற்றுள்ளனர் நல்ல விசயத்தை தேடுங்கள்

      Delete
  6. அப்படியே முதுகலை ஆசிரியர் தேர்வையும் அதாவது 2013 To 2018 பணிநியமனம் செய்யப்பட்டவர்களையும் சரிபார்க்கவும்

    ReplyDelete
  7. Please check and verify trb computer instructor exam also.. so many fraud had happened

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி