அறைக் கண்காணிப்பாளர்களுக்கான அறிவுரைகள்
1. ஆய்வு அலுவலரிடமிருந்து உரிய எழுத்துப்பூர்வமான ஆணை பெற்றவுடன் அந்தந்தத் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர் தேர்வுக்கு முன்பாக நடத்தும் தேர்வுப் பணி குறித்த கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் .
2.அறைக் கண்காணிப்பாளர்கள் தேர்வு குறித்த அனைத்து அறிவுரைகளையும் சரியாக பெற்றுக் கொண்டு , தங்களது தொலைபேசி / அலைபேசி எண்ணைக் கண்டிப்பாக முதன்மைக் கண்காணிப்பாளரிடம் அளிக்க வேண்டும் .
3.ஒவ்வொரு தேர்வு நாளன்றும் அறைக் கண்காணிப்பாளர்கள் + 1 / + 2 / SSLC 8 . 45மணிக்குள் தேர்வு மையத்திற்கு வர வேண்டும் . உடன் தங்களது அலைபேசியினை Switch off செய்து முதன்மைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும் .
4.அவ்வாறு தத்தமது அலைபேசிகளைத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறையில் ஒப்படைக்காமல் , தம்முடன் தேர்வறையில் அறைக் கண்காணிப்பாளர்கள் தங்கள் வசம் வைத்திருப்பதாகப் பின்னர் கண்டறியப்பட்டால் , அன்னார் மீது கடுமையான துறை நடவடிக்கை எடுக்கப்படும் .
5.முதன்மைக் கண்காணிப்பாளரிடமிருந்து பெறப்பட்ட அடையாள அட்டையைக் கண்டிப்பாக அணிய வேண்டும் .
6.அறைக் கண்காணிப்பாளர்கள் தேர்வுப் பணிக்கு வந்தவுடன் தேர்வுகட்டுப்பாட்டு அறையில் வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்டு , குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட அறை எண்ணிற்குரிய விடைத்தாள் மற்றும் அறைக்குரிய வருகைப்பட்டியல் அடங்கிய துணி / ரெக்சின் பையினை எடுத்துக் கொள்ள வேண்டும் .
7.அறைக் கண்காணிப்பாளர் தான் எடுத்த உறையில் உள்ள விடைத்தாட்களை வெளியே எடுத்து உறையின் மீதுள்ள தேர்வு எண்ணும் , விடைத்தாளின் முகப்புச் சீட்டில் உள்ள தேர்வு எண்ணும் , தேர்வர் வருகைச் சீட்டில் உள்ள தேர்வு எண்ணும் சரியாக உள்ளதா என்பதையும் சரிபார்க்க வேண்டும் . மேலும் முதன்மைக் கண்காணிப்பாளரின் ஒப்ப உருவ நேர்படி ( FACSIMILE ) உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும் . அன்றையத் தேர்வுப் பாடத்திற்குரியதேவையான எண்ணிக்கையில் கூடுதல் விடைத்தாட்களை முதன்மைக் கண்காணிப்பாளரிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும் .
8 . விடைத்தாளின் அனைத்துப் பக்கங்களும் சரியாக உள்ளனவா என்பதைப் பிற்சேர்க்கை 7ன் படி சரிபார்த்தப் பின்னர் முகப்புத் தாளின் A பகுதியின் வலது புறத்தில் Verified எனக் குறிப்பிட்டுக் கையொப்பம் இட வேண்டும் . தேர்வு துவங்குவதற்கு முன் எக்காரணம் கொண்டும் அனைத்து முதன்மை விடைத்தாட்களிலும் துளையிடும் கருவி கொண்டு துளையிடக் கூடாது . கூடுதல் விடைத்தாட்கள் பயன்படுத்தும் போது மட்டும் தேர்வர்களின் முதன்மை விடைத்தாளையும் , கூடுதல் விடைத்தாட்களையும் துளையிடும் கருவி கொண்டு துளையிட்டு சேர்த்துக் கட்ட வேண்டும் .
9 . முதன்மைக் கண்காணிப்பாளர் + 1 / + 2 / SSLC 9 . 30மணிக்கு வழங்கக் கூடிய வினாத்தாள் கட்டுகளைப் பெற்று , தேர்வு நாள் , தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வறைக்குரிய பாடம் , ஆகியவை சரியாக உள்ளதா என சரிபார்த்துக் கொள்ள வேண்டும் . தேர்வு அறைக்குச் செல்லும் முன்பாக , முதன்மை விடைத்தாள் , கூடுதல் விடைத்தாள் , தேர்வர் வருகைச் சீட்டு , வினாத்தாள் , வினாத்தாள் கட்டினைப் பிரிப்பதற்கான மடக்குக் கத்தி ஆகியவை சரியாக உள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும் .
10,11,12th Public Examination March 2020 - Hall Supervisors Duties And Responsibilities Hand Book - Download here
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி