28.02.2020 ( வெள்ளிக்கிழமை ) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 4, 2020

28.02.2020 ( வெள்ளிக்கிழமை ) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.


விழுப்புரம் மாவட்டம் , மேல்மலையனூர் வட்டம் மற்றும் நகரம் , அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவிலில் எதிர்வரும் 28 . 02 . 2020 அன்று நடைபெறவுள்ள திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு 28 . 02 . 2020 அன்று ஒரு நாள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது . மேற்படி தினத்தில் அவசர அலுவல்களை கவனிக்கும்பொருட்டு விழுப்புரம் மாவட்ட கருவூலகமும் மற்றும் சார்நிலைக் கருவூலகங்களும் குறைந்த பணியாளர்களைக் கொண்டு இயங்கும் . மேலும் , மாணவ / மாணவியர்களுக்கு 28 . 02 . 2020 அன்று பள்ளி இறுதித் தேர்வுகள் நடைபெற தேதி நிர்ணயிக்கப்பட்டிருப்பின் அந்த தேர்வுகள் அன்றைய தேதியில் வழக்கம்போல் நடைபெறும் எனவும் , உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள 28 . 02 . 2020 - க்குப் பதிலாக 14 . 03 . 2020 ( சனிக்கிழமை ) பணிநாள் எனவும் அறிவிக்கப்படுகிறது ,

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி