Flash News : 5 ,8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 4, 2020

Flash News : 5 ,8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.

பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று 5 ,8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.



5ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு குறித்து மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு . கோ . செங்கோட்டையன் அவர்களின் அறிக்கை - நாள் 4 . 2 . 2020 

* 5 மற்றும் 8வது வகுப்பு மாணவர்களுக்கு 2019 - 2020ஆம் ஆண்டு முதல் பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக 13 . 9 . 2019 அன்று பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது . இது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் வரப்பெற்றன .

* அவற்றை மாண்புமிகு அம்மாவின் அரசு கவனமுடன் பரிசீலித்து , இந்த அரசாணையை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளது . எனவே , ஏற்கனவே உள்ள பழைய நடைமுறையே தொடரும் என்றும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன் . - அமைச்சர் செங்கோட்டையன்

5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு ரத்து ஏன்?

🛡 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென ஆசிரிய இயக்கங்களும், கல்வியாளர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

🛡 இதனிடையே பொதுத் தேர்வை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர் லூயிஸ் தொடர்ந்த வழக்கில், வழக்கறிஞர் லஜபதிராய் முன்வைத்த வாதங்களை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, சரமாரியான கேள்விகளை அரசிடம் எழுப்பியிருந்தது.

🛡 நேற்று 03.02.2020-ல் அறிக்கை வெளியிட்டிருந்த பள்ளிக் கல்வித்துறை ஆணையரும் பொதுத் தேர்வை நியாயப்படுத்தியே குறிப்பிட்டிருந்தார்.

🛡 இந்நிலையில், இன்று (04.02.2020) 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வை ரத்து செய்வது என தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும்,

🛡 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பழைய நடைமுறைகளின் படியே ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறும் எனவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

24 comments:

  1. yethavathu pesi yosichu nalla mudivuku vantha sari

    ReplyDelete
  2. Achacho yennoda payyana couching class la seththu viddene yellam Veena pochu

    ReplyDelete
  3. Replies
    1. you are right sir. std 8 alone can write. Then only they know the importance of Education

      Delete
  4. North Indian க்கு இது நல்ல முடிவு

    ReplyDelete
  5. super .consider pgtrb selected candidates counselling. we are all resigned our jobs and waiting for counselling.illavu katha kiliac pola,eppa varum???

    ReplyDelete
    Replies
    1. கலங்காதே தோழா வெற்றிக்கான பரிசு சற்று தள்ளி இருக்கின்றது.

      Delete
  6. அந்த பயம் இருக்கட்டும்.

    ReplyDelete
  7. Appo second grade teachers appointment?

    ReplyDelete
  8. you are right sir. std 8 alone can write. Then only they know the importance of Education

    ReplyDelete
  9. you are right sir. std 8 alone can write. Then only they know the importance of Education

    ReplyDelete
  10. கல்வி தமிழ்நாட்டில் தள்ளாடுகிறது.

    ReplyDelete
  11. oru tamilnattu school ulla poittu anga irukura teachers students ku direct questions kettu atha video shoot panni youtube la podunga, apo therium latchanam

    ReplyDelete
  12. Sir dnt blame the trs think the future of ur child, if there is no exam means they dnt knw the importance of edn .nw a days we r in competitive condn and challengable life so they must need the exam mainly frm 8th so dnt be always silly in
    complaining others

    ReplyDelete
  13. Very nice decision. If there need to be public exam then they should have announced atleast one year back

    ReplyDelete
  14. Very nice decision. If there need to be public exam then they should have announced atleast one year back

    ReplyDelete
  15. Sir dnt blame the trs think the future of ur child

    ReplyDelete
  16. பொது தேர்வு வச்சா தான் மாணவன் படிப்பான் என்பதும்.. அப்போ தான் கல்வி என்றால் என்னனு தெரியும் என்றால் நிஜமாவே தமிழ்நாட்டில் கல்வியின் நிலை தள்ளாட்டம் தான்.. கல்வி தேர்வுக்காக அல்ல ..

    ReplyDelete
  17. இந்த முடிவு வரவேற்க தக்கது.

    ReplyDelete
  18. குழந்தை பருவத்தில் தேர்வுத் தேவையில்லை. இந்த முடிவு வரவேற்க தக்கது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி