தனியார் பள்ளிகளில் வெளியேற்றப்படும் மாணவர்கள்: அரசுக்கு ஆசிரியர் சங்கம் கோரிக்கை!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 9, 2020

தனியார் பள்ளிகளில் வெளியேற்றப்படும் மாணவர்கள்: அரசுக்கு ஆசிரியர் சங்கம் கோரிக்கை!!


பல தனியார் பள்ளிகளில் இடைநிற்றல் என்ற பெயரில் வலுக்கட்டாயமாக 8 மற்றும் 9-ஆம் வகுப்புகளில் இருந்து மாணவர்கள் வெளியேற்றப்படுவதை அரசு தடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்க மாநில நிர்வாகிகள் அவசரக் கூட்டம் சென்னை எழும்பூரில் சனிக்கிழமை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சங்கத்தின் தலைவர் பி.கே.இளமாறன் செய்தியாளர்களிடம் கூறியது: மாநில நிர்வாகிகள் அவசரக் கூட்டத்தில் முக்கியத் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளோம். 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகளை ரத்து செய்ததற்காக அரசுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

புதிதாக உருவாக்கப்பட்ட ஐந்து மாவட்டங்களுக்கு முதன்மைக் கல்வி அதிகாரிகளை விரைவில் நியமிக்க வேண்டும். பள்ளிக் கல்வித் துறையில் 2014-2015- ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட கணக்காளர், கணினி உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களில் 1,512 பேருக்கு தொகுப்பூதியம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. 
அவர்களை பணி நிரந்தரப்
படுத்த வேண்டும்.
 
இவர்களுக்கு மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட நிதியை வழங்காமல் தமிழக அரசு இழுத்தடிக்கிறது. அதனை உடனடியாக வழங்க வேண்டும்.
 பள்ளிக் கல்வித் துறையின் அறிவுரைகளை அரசுப் பள்ளிகளைத் தவிர, பிறப் பள்ளிகள் கடைப்பிடிப்பதில்லை என்பதால் தனியார் பள்ளிகளை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். 

அரசுப்பள்ளி ஆசிரியர்களில் உயர் கல்வி பயின்றவர்களுக்கு ஊக்கத்தொகை உடனடியாக வழங்கப்பட வேண்டும். கட்டாயக் கல்வித் திட்டத்தின் கீழ் 25 சதவிகித மாணவர்களை சேர்க்க வேண்டும் என்கிற விதியை தனியார் பள்ளிகள் நடைமுறைப்படுத்துகிறதா என அரசு கண்காணிக்க வேண்டும்.

கடந்த பத்து ஆண்டுகளாக பல தனியார் பள்ளிகளில் இடைநிற்றல் என்ற பெயரில் வலுக்கட்டாயமாக 8 மற்றும் 9-ஆம் வகுப்புகளில் இருந்து மாணவர்கள் வெளியேற்றப்படுவதை அரசு தடுக்க வேண்டும். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் பள்ளிக் கல்வித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

1 comment:

  1. சொத்த கத்திரிக்காயை சந்தையில் தள்ளும் செயலா?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி