ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி , மாநிலத் திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகளில் , 2019 - 20ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இரண்டு நாள்கள் Post NAS பயிற்சி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கிணங்க , தேசிய அடைவு ஆய்வுக்குப் பிந்தைய செயல்பாடுகளை Post NAS Activities திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மேற்கொள்ளும் பொருட்டு , மாவட்டத்திலுள்ள அனைத்து வகை அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இரண்டு நாள்கள் Post NAS பயிற்சி வழங்கப்படவுள்ளது .
அதன் தொடக்கமாக , அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்களுக்கு 17 . 02 . 2020 மற்றும் 18 . 02 . 2020 ஆகிய இரண்டு நாள்கள் கீழ்க்காணும் அட்டவணைப்படி , அந்தந்த கல்வி மாவட்டங்களில் இப்பயிற்சி வழங்கப்படவுள்ளது . பயிற்சியில் சரியான நேரத்தில் பங்குபெறும் வகையில் அறிவியல் பாட ஆசிரியர்களை பணிவிடுவித்து அனுப்பி வைக்குமாறு அனைத்து வகை அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி