பிளஸ் 2 கணித தேர்வு - கருணை மதிப்பெண் வழங்க கோரிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 20, 2020

பிளஸ் 2 கணித தேர்வு - கருணை மதிப்பெண் வழங்க கோரிக்கை!


பிளஸ் 2 கணித தேர்வில், ஐந்து கேள்விகள் மிகவும் சிக்கலாக இருந்ததால், அதற்கு கருணை மதிப்பெண் வழங்க, கோரிக்கை எழுந்துள்ளது.பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொது தேர்வுகள் நடந்து வருகின்றன.

இந்த ஆண்டு, மொழி பாட தேர்வுக்கான வினாத்தாள் மட்டுமே, எளிமையாக இருந்தது. மற்ற அனைத்து பாடங்களுக்கும், கடினமான கேள்விகள் இருந்தன. அதனால், இந்த ஆண்டு பிளஸ் 2 மதிப்பெண் பெருமளவு குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கணித தேர்வில், ஐந்து கேள்விகள் மாணவர்களைகுழப்பும் விதத்தில் இருந்ததால், அதற்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

வினாத்தாள் வகை, 'ஏ,பி' யில், 9 மற்றும் 4ம் வினாவிற்கான குறிப்பில், ஒன்றுக்கும் மேற்பட்ட சரியான குறிப்புகள் இருந்தன. அதனால், அதை எழுத முயற்சித்தோருக்கு மதிப்பெண்வழங்க வேண்டும்.மேலும், 11, 15, 16 மற்றும், 38ல் இடம் பெற்ற கேள்விகள்,மாணவர்களை குழப்புவதாக இருந்தது. அவற்றுக்கு மாணவர்கள்விடையளிக்க முயற்சித்து இருந்தால், கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

5 comments:

  1. முட்டாள்தனமான கோரிக்கை

    ReplyDelete
    Replies
    1. Neenga antha test ta eluthiruntha theriyum enga kasdam

      Delete
  2. கடினமான புத்தகம் கடினமான வினாத்தாள்....
    கணித பாடத்தில் +1 மாணவர் சேர்க்கை குறையும்

    ReplyDelete
  3. Physics test ithai Vida kulappama difficult ta irunthuchi appo athukki karunai mark valankappaduma?

    ReplyDelete
  4. No comments from teachers,experts?????

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி