திறனாய்வு தேர்வில் 30 ஆண்டுகளாக உயராத கல்வி உதவித்தொகை - மாணவர்கள் ஏமாற்றம - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 4, 2020

திறனாய்வு தேர்வில் 30 ஆண்டுகளாக உயராத கல்வி உதவித்தொகை - மாணவர்கள் ஏமாற்றம


திறனாய்வு தேர்வில் வழங் கப்படும் கல்வி உதவித்தொகை 30 ஆண்டுகளாக மாறாமல் இருப்ப தால் மாணவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் .

தமிழக பள்ளிக்கல்வி துறையில் 1991ம் ஆண்டு முதல் 8ம் வகுப்பு மாண வர்களுக்கு ஆண்டுதோ றும் திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது . ஒரு மாவட்டத்திற்கு 3 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுது கின்றனர் . இதில் 50 மாணவர் . 50 மாணவியர் என 100 பேர் தேர்வு செய்யப்படுவர் . அவர்களுக்கு 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை கல்வி உதவித் தொகையாக ரூ . ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது இத்திட்டம் தொடங்கப் பட்டு , 30 ஆண்டுகள் ஆகி றது .

தற்போது 14 லட்சத்திற்கும் மேலான மாணவர்கள் 8ம் வகுப்பு படித்து வருகின்றனர் . மாணவர்களின் பொருளாதார நிலையம் பன்மடங்கு உயர்ந்துள்ளது . ஆனால் பல ஆண்டுகள் கோரிக்கை விடுத்தும் இந்த ஊக்கத்தொகை மட்டும் இது வரை உயர்த்தப்பட வில்லை . கடந்த 1991ல் இத்தொகை பெற மாணவரின் பெற்றோர் வருவாய் ஆண்டிற்கு ரூ . 12 ஆயிரமாக இருந்தது . தற்போது அது ரூ . ஒருலட்சமாக உயர்த்தப் பட்டுள்ளது . அதேநேரம் ஊக்கத்தொகையில் மட்டும் மாற்றம் இல்லாதது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி