கொரோனா விழிப்புணர்வு-கவிதை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 16, 2020

கொரோனா விழிப்புணர்வு-கவிதை

வேணா கொரோனா

வாரன்ட்டி இல்லாத நாட்டுல இருந்து 
உசுர எடுக்க கேரன்ட்டியோட வந்திருக்கு கொரோனா

சித்தர் பாட்டுல சிலப்பதிகார நோட்டுல நோய பத்துன குறிப்பிருக்குனு அலையுதுக வேலையத்த குரூப்பு

வேண்டாத வேலைய வம்படியா பாக்க தமிழனா இருந்தா ஷேர் பன்னுனு சொல்லித் திரியுதடா ஒரு தரப்பு

மேல்நாட்டு வியாதி இது மேல்பாகத்த அதிகம் தாக்குது
தும்மி இருமி மூச்சிரைக்க வைக்குமாம் கொரனா கிருமி
சுத்தம் இல்லாட்டி வாலாட்டி வலம் வருமாம் உருமி

கூட்டமா கூடாத 
எவனா காச தர்ரான்னு கும்பலா ஓடாத
வாராத நோய் சுமந்து மனம் நோக வாடாத

எச்சி தெறிக்க பேசாத
சுய சுத்தம் செஞ்சிக்க கூசாத
கைய கழுவு அடிக்கடி
கைக்குட்டையே இப்போதைக்கு முகமூடி

தாத்தா பாட்டி காலத்துல இல்லாத நோயெல்லாம் உலவுது தேசத்துல
குளிரான பொருளுல கிருமி குடியிருக்குதாம் இந்த வெயில் மாசத்துல
பிஞ்சு பெரிசுனு பாக்காது
சுத்தமா இருந்திட்டா நோய் அறவே தாக்காது

புரளி பேசி அரளி வைக்காம
புரிஞ்சு நடந்து நோய விரட்டு


வேணா நமக்கு கொரோனா
சுத்தமிருந்தா சத்தமில்லாம அதுவும் விலகிடும் தானா
அதுவரை வதந்திய பரப்பாதீங்க வீணா

சீனி.தனஞ்செழியன்,
முதுகலைத்தமிழாசிரியர்,
அஆமேநிப, திருவலம்.
வேலூர் மாவட்டம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி