அரசு பள்ளிகளில் காலி வகுப்பறைகள் உணவுக்கூடமாக மாற்றம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 8, 2020

அரசு பள்ளிகளில் காலி வகுப்பறைகள் உணவுக்கூடமாக மாற்றம்.


பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்ற றிக்கை:

தமிழக அரசின் சத்துணவு திட்டத் தில் பயன்பெறும் மாணவ, மாணவியர் சுகாதார முறையில் மதிய உணவு உட்கொள்ளும் வகையில், அனைத்து பள்ளிகளிலும் காலியாக அல்லது பயன் படுத்தப்படாமல் உள்ள வகுப்பறைகளை சீர் செய்து உணவு அருந்தும் கூடங்களாக மாற்றி அமைப்பது தொடர்பாக கடந்த மார்ச் 4-ம் தேதி சமூகநலத் துறை ஆணையர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.அதன்படி பயன்படாத வகுப்பறை களை சீர் செய்து மாணவர்களின் உணவருந்தும் கூடங்களாக மாற்றித் தர ஏதுவாக, அப்பள்ளிகளின் பெயர்ப் பட்டியல் மற்றும் அதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி களும் விரிவான அறிக்கையாக தயாரித்து, துறை இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

1 comment:

  1. Goverment hotel coming soon after closing all the school

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி