சோப்பு போட்டு கை கழுவினால் கொரோனா இறந்துவிடுமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 15, 2020

சோப்பு போட்டு கை கழுவினால் கொரோனா இறந்துவிடுமா?


சோப்பு போட்டு கை கழுவினால் கொரோனா இறந்துவிடுமா?

ஆமாம்... இறந்துவிடும்.

பெரும்பாலான வைரஸ்கள் மூன்று பொருட்களால் ஆனதே.

*ஆர்.என்.ஏ (RNA)

*ப்ரோடீன்கள்

*லிப்பிடுகள்

இந்த லிப்பிடுகள் கொழுப்பால் ஆனவை. இதுவே வைரஸ்சின் வெளி அடுக்கு ஆகும். இதன் உள்ளே தான் RNA இருக்கும். அது மட்டுமின்றி, இந்த லிப்பிடுகள் தான், நம் கையில் ஒட்டிக்கொள்ள காரணமாக இருக்கிறது.

நீங்கள் சோப்பு போட்டு கை கழுவும்போது, சோப்பு லிப்பிடுகளைக் கரைத்து விடும். அதற்குமேல் வைரஸ் உங்கள் கைகளில் தங்க முடியாது. லிப்பிடுகள் இன்றி வைரசும் வாழ முடியாது.

லிப்பிடுகள் கரைய 20 வினாடிகள் வரை பொதுவாக ஆகும். 20 வினாடிகள் சோப்பு போட்டு கையை கழுவினால் மொத்த கொரோனாவும் க்ளோஸ்.

பின்குறிப்பு: வைரஸ் எனபது ஒரு உயிர் உள்ள கிருமி என்று சொல்லிவிட முடியாது. அது இன்னொரு வாழும் உயிரினத்தின் மேல் இருக்கும்போது மட்டுமே உயிருடன் இருக்கும். மற்றபடி அது உயிரற்ற ஆர்கானிக் கூறுகள் அவ்வளவே.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி