போலி நியமன ஆணை - FIR பதிவு செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு !! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 30, 2020

போலி நியமன ஆணை - FIR பதிவு செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு !!


ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தற்போது அலுவலகப்பணியாளர், அலுவலக உதவியாளர், பெருக்குபவர், இரவுக்காவலர் உள்ளிட்ட எந்த பணியிடமும் புதிதாக பணியிட ஆணை வழங்கப்படவில்லை.

எனவே, எவரேனும் நியமன ஆணையுடன் பணியில் சேர வருகைபுரிந்தால் பணியில் சேர அனுமதிக்க வேண்டாம் எனவும், அருகில் உள்ள காவல் நிலையில் FIR பதிவு செய்யவும், விவரத்தினை உடனடியாக வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்தில் தெரிவிக்கும்படி கோருதல்

/தனிகவனம்/

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கவனத்திற்கு,

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தற்போது அலுவலகப்பணியாளர், அலுவலக உதவியாளர், பெருக்குபவர், இரவுக்காவலர் உள்ளிட்ட எந்த பணியிடமும் புதிதாக பணியிட ஆணை வழங்கப்படவில்லை.

எனவே, எவரேனும் நியமன ஆணையுடன் பணியில் சேர வருகைபுரிந்தால் பணியில் சேர அனுமதிக்க வேண்டாம் எனவும், அருகில் உள்ள காவல் நிலையில் FIR பதிவு செய்யவும்,   விவரத்தினை உடனடியாக வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்தில் தெரிவிக்கும்படியும் அனைத்து அரசு/ நகரவை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

எவரேனும் பணியில் சேர அனுமதிக்கப்பட்டால் சார்ந்த தலைமையாசிரியர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

4 comments:

  1. Appointment order koduttha aaluku cutout vainga....

    ReplyDelete
  2. போலி தகுதி இல்லாத பகுதி நேர ஆசிரியர்கள் 2012 ம் ஆண்டு முதல் 8ஆண்டுகளாக பணி செய்து வருகிறார்கள்.அவர்களுக்கு பணி செய்ய அனுமதி அளித்த பள்ளி தலைமை ஆசிரியர் முதல் முதன்மை கல்வி அலுவலர் வரை அனைவரின் மீதும் FIR என்ற முதல் தகவல் அறிக்கை காவல் துறை மூலம் பதிவு செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பகுதி நேர ஆசிரியர்கள் மத்தியிலும் எழுந்து உள்ளது

    ReplyDelete
  3. போலி தகுதி இல்லாத பகுதி நேர ஆசிரியர்கள் 2012 ம் ஆண்டு முதல் 8ஆண்டுகளாக பணி செய்து வருகிறார்கள்.அவர்களுக்கு பணி செய்ய அனுமதி அளித்த பள்ளி தலைமை ஆசிரியர் முதல் முதன்மை கல்வி அலுவலர் வரை அனைவரின் மீதும் FIR என்ற முதல் தகவல் அறிக்கை காவல் துறை மூலம் பதிவு செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பகுதி நேர ஆசிரியர்கள் மத்தியிலும் எழுந்து உள்ளது

    ReplyDelete
  4. உலகமே உயிருக்கு உத்தரவாதம் இல்லாத இந்த சூழலிலும் போலி நியமன ஆணை .. விளங்கிடும்.. கருவிலேயே திருடர் மற்றும் திருடிகளாக உருவாகியிருப்பர்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி