வாட்ஸ்அப் மூலமாக 10ஆம் வகுப்பு மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்யும் ஆசிரியர்கள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 26, 2020

வாட்ஸ்அப் மூலமாக 10ஆம் வகுப்பு மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்யும் ஆசிரியர்கள்!


அதிராம்பட்டினம், அரசு உதவி பெறும் பள்ளியில், 'வாட்ஸ் ஆப்' குழுவை உருவாக்கி, 10ம் வகுப்புமாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்தி வருகின்றனர்.ஊரடங்கால், இந்த ஆண்டுக்கான, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

வீட்டில் முடங்கிக் கிடக்கும் மாணவர்களை தேர்வுக்கு தயார் படுத்தும் விதமாக, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் அரசு உதவிப்பெறும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், வாட்ஸ் ஆப் குரூப் உருவாக்கி, அதன் மூலம், பாடங்களை நடத்தி வருகின்றனர்.இது குறித்து, தமிழ் ஆசிரியர் அஜ்முதீன் கூறியதாவது: பள்ளியில், 151 மாணவர்கள் தமிழ் வழியிலும், 46 மாணவர்கள் ஆங்கில வழியிலும், 10ம் வகுப்பு படிக்கின்றனர்.

ஊரடங்கால், பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களின் படிப்பு பாதிக்க கூடாது என்பதற்காக, அவர்களின் மொபைல் எண்களை சேகரித்து, வாட்ஸ் ஆப் குழுவை உருவாக்கியுள்ளோம்.இதில், ஒவ்வொரு பாடப்பிரிவுகளின் ஆசிரியர்களும், மாதிரி வினாத்தாள் அனுப்பி, தேர்வு எழுதுவதற்கு பயிற்சி கொடுத்து வருகின்றனர்.மாணவர்களும், வாட்ஸ் ஆப்பிலேயே விடைகளை அனுப்புகின்றனர்.

ஆசிரியர்கள், அதில், திருத்தம் செய்து அனுப்புவதோடு, பாடம் தொடர்பான வீடியோக்கள், ஆடியோக்களும் குழுவில் அனுப்பி வைக்கப்படுகின்றன.வாட்ஸ் ஆப் வசதி இல்லாத, மீனவ குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு, அவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் நம்பரை வாங்கி, ஆசிரியர்கள் பேசி, தேர்வுக்கு தயாராகும்வழிகளை கற்றுத் தருகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.

1 comment:

  1. திருச்சி மாவட்டம் வலையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் கணித ஆசிரியர் சிவக்குமார் அவர்கள் whatsup group மூலம் பாடங்கள் நடத்தியும் தேர்வுகள் மூலம் பயிற்சி அளித்து வருவது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே மகிழ்ச்யை ஏற்படுத்தியுள்ளது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி