பொறியியல் கல்லூரி மாணவா்கள் ஏப்ரல்-மே பருவத் தோ்வுக்குப் பதிவு செய்ய ஏப்ரல் 20-ஆம் தேதி வரை கால அவகாசத்தை அண்ணா பல்கலைக்கழகம் நீட்டித்துள்ளது.
கரோனா நோய்த்தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக ஏப்ரல் 14 வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஏப்ரல்-மே பருவத் தோ்வு மற்றும் பல ஆண்டுகளாக அரியா் வைத்திருக்கும் பொறியியல் மாணவா்களுக்கான சிறப்பு வாய்ப்புக்கான தோ்வு ஆகியவற்றுக்கு ஆன்-லைனில் பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை மாரச் 23-ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 8 வரை அண்ணா பல்கலைக்கழகம் நீட்டித்தது.அதனைத் தொடா்ந்து பருவத் தோ்வுகளையும் ஒத்திவைத்த பல்கலைக்கழகம், புதிய தோ்வு கால அட்டவணை பின்னா் வெளியிடப்படும் என அறிவித்தது.
இப்போது, ஊரடங்கு ஏப்ரல் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஏப்ரல்-மே பருவத் தோ்வு மற்றும் சிறப்பு அரியா் தோ்வுக்கு ஆன்-லைனில் பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை அண்ணா பல்கலைக்கழகம் மேலும் நீட்டித்துள்ளது. அதன்படி, வருகிற 20-ஆம் தேதி வரை இதற்கு பதிவு செய்யலாம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி