அவசரத் தேவைக்காக இருந்து 60% வரை கூடுதலாக மாநில அரசுகள் கடன் பெறலாம் - ரிசர்வ் வங்கி ஆளுநர்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 17, 2020

அவசரத் தேவைக்காக இருந்து 60% வரை கூடுதலாக மாநில அரசுகள் கடன் பெறலாம் - ரிசர்வ் வங்கி ஆளுநர்!


ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் அறிவிப்பு
ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு மே 3 வரை நீட்டித்த நிலையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் கொரோனா தொடர்பாக நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலை குறித்தும் , சில  அறிவிப்புகளையும் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டார்.

* கொரோனாவுக்கு எதிரொலியாக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை உண்ணிப்பாக கவனித்து வருகிறோம்.

* கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய சவால்.

* வங்கிகள் வழக்கம் போல் இயங்குவதை ஆர்.பி.ஐ உறுதிசெய்துள்ளது.

* 2020 - 2021ல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

* இந்தியாவில் அரிசி, கோதுமை , ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாடு வராது.

* ஊரடங்கு காலக்கட்டத்தில் இணையதள பயன்பாடு மற்றும் இணையதள பணப்பரிமாற்ற சேவை அதிகரித்துள்ளது.

அறிவிப்புகள் :

* வங்கிகளுக்கான ரிசர்வ் வங்கி தரும் கடனுக்கான ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 4% இருந்து 3.75% குறைப்பு.

* கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்ய மாநில அரசுகள் கூடுதலாக கடன்பெற ஏற்பாடு.

* அவசரத் தேவைக்காக ரிசர்வ் வங்கியிடம் இருந்து 60% வரை கூடுதலாக மாநில அரசுகள் கடன் பெறலாம்.




3 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி