விடைத்தாள் திருத்தும் பணி மீண்டும் ஒத்திவைப்பு - தேர்வுத்துறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 2, 2020

விடைத்தாள் திருத்தும் பணி மீண்டும் ஒத்திவைப்பு - தேர்வுத்துறை


2020 - 2021 ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்வானது மார்ச்,  ஏப்ரல் மாதங்களில் 10,11,12ஆம் வகுப்புகளுக்கு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு தொடங்கி நடந்துவந்த நிலையில்,  கோரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேர்வு நடைபெறுவது தள்ளிபோகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 12ஆம் வகுப்புக்கு மட்டும் பொதுத்தேர்வு முழுவதும் நடந்து முடிந்தது. 11ஆம் வகுப்புக்கு 1 தேர்வு மீதமுள்ளது. 10ஆம் வகுப்புக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இன்நிலையில் தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணியானது கடந்த மார்ச் 31-ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில்,  ஏப்ரல் 7ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாக தெரிவித்தது தேர்வுத்துறை. தற்போது அந்த தேதியும் ஒத்திவைக்கப்படுவதாகவும்,  தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி