பள்ளிகள் திறப்பு எப்போது? - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 16, 2020

பள்ளிகள் திறப்பு எப்போது? - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்


கொரோனா தொற்று சூழலை பொறுத்து தான், பள்ளிகள் திறப்பு முடிவு செய்யப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு மாவட்டம், நம்பியூரில் நேற்று அவர் கூறியதாவது:ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால், 10ம்வகுப்புக்கு பொது தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும்.

தற்போதைய சூழலில், விடைத்தாள்கள் திருத்த முடியாத நிலை உள்ளது.விடைத்தாள் திருத்தும் மையத்தில், 200 முதல், 300 ஆசிரியர்கள், ஒரே இடத்தில் குவிய வேண்டியிருக்கும். இதனால், ஆசிரியர்கள் வெளியே நடமாட வேண்டிய சூழல் ஏற்படும். தற்போதைய ஊரடங்கு உத்தரவு சூழலில், எவரும் வெளியே நடமாடக்கூடாது.

வழக்கமான காலங்களில், ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படும். அதனால், இன்னும் நமக்கு கால அவகாசம் உள்ளது. கொரோனா தொற்று சூழலை பொறுத்து தான், பள்ளிகள் திறப்பு முடிவு செய்யப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

5 comments:

  1. South Koriya ventures online schooling. Can be planned for on Tamilnadu too.

    It is time to go from one level to another level.

    Study material may be prepared so that it is online friendly.

    It is high time to plan for that.

    ReplyDelete
  2. Ivanukku oru mannum theriyathu


    Chemistry posting eponum theriyaathu.. Ularal

    ReplyDelete
  3. தமிழ்நாட்டில் தற்போது மிகவும் ஜாலியாக இருக்கும் ஒரே துறை பள்ளிக்கல்வித்துறைதான்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி