அவசர பயணத்துக்கான அனுமதியை இனி ஆட்சியர்கள் மட்டுமே வழங்க முடியும் என்று தலைமைச் செயலாளர்
க . சண்முகம் உத்தரவிட்டுள்ளார் . இதற்கான கடிதத்தை அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் , அனைத்து நகராட்சி ஆணை யர்களுக்கு அவர் வியாழக்கிழமை அனுப்பிவைத்தார் .
அந்தக் கடிதத்தின் விவரம் :
அவசர பயணத்தை மேற்கொள்ள அனுமதிச் சீட்டுகள் வழங் கும் அதிகாரமானது மாவட்டங்களில் ஆட்சியர்களிடம் இருந் தும் , சென்னை மாநகராட்சியில் ஆணையரிடம் இருந்தும் முறையே வட்டாட்சியர்கள் , துணை ஆணையர்களிடம் வழங்கப் பட்டிருந்தது . | இந்த நடைமுறைகளில் அரசுக்கு திருப்தி ஏற்படவில்லை . மக்கள் பலரும் சாலைகளில் செல்லும் நிலை காணப்படுகிறது . இதைத் தொடர்ந்து , முதல்வர் பழனிசாமியின் உத்தரவின் அடிப் படையில் அனுமதிச் சீட்டு வழங்கும் நடைமுறையில் உடனடி யாக மாற்றம் கொண்டு வரப்படுகிறது.
திருமணம் , மருத்துவமனைகளுக்குச் செல்வது , இறப்பு போன்ற நிகழ்வுகளுக்குச் செல்லும் போது தனி உதவியாளர் ( பொது ) மூல மாக ஆட்சியரிடம் இருந்து அனுமதியைப் பெற வேண்டும் . இதே போன்று , சென்னை மாநகராட்சியில் ஆணையரிடம் இருந்து மட்டுமே அனுமதிச் சீட்டுகளைப் பெற முடியும்.
பொது மக்க ளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் இத்தகைய தடை முறை கொண்டு வரப்பட்டுள்ளதாக தனது கடிதத்தில் தலைமைச் செயலாளர் க . சண்முகம் தெரிவித்துள்ளார் .
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி