RTE - இலவச மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு தள்ளி வைப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 3, 2020

RTE - இலவச மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு தள்ளி வைப்பு.


கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், இலவச மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு, ஊரடங்கு காரண மாக தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமை சட்டப்படி, தமிழகத்தில் அனைத்து தனியார் பள்ளிகளிலும் நுழைவு வகுப்புகளில், 25 சதவீத இடங்களில், இலவச மாணவர் சேர்க்கைவழங்கப்படுகிறது.எல்.கே.ஜி., உள்ள பள்ளிகளில், எல்.கே.ஜி.,க்கும்; மற்ற பள்ளி களில், ஒன்றாம் வகுப்புக்கும், அரசின் வழியே மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.இந்த சேர்க்கையில் அனுமதி பெறும் மாணவர்கள், எட்டாம் வகுப்பு வரை கல்வி கட்டணம் செலுத்த வேண்டாம். அவர்களுக்கான கட்டணத்தை, மத்திய - மாநில அரசுகள் வழங்கும்.இந்த மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு, ஒவ்வொரு ஆண்டும்,ஏப்ரல், 2ல் வெளியிடப்படும்.

தற்போது, ஊரடங்கு அமலில் உள்ளதால், நேற்று வெளியாகவிருந்த மாணவர் சேர்க்கை அறிவிப்பு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு முடிந்த பின், புதிய தேதி அறிவிக்கப்படும் என, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர், கருப்பசாமி அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி