அறிவியல் உண்மை - அடிபட்டால் உயிரினங்களுக்கு வலிப்பது ஏன்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 29, 2020

அறிவியல் உண்மை - அடிபட்டால் உயிரினங்களுக்கு வலிப்பது ஏன்?

வலி என்பது விரும்பத்தகாத ஓர் எதிர்மறை உணர்ச்சி ஆகும். வலியை விரும்பவில்லை என்றாலும் உயிர்களுக்குமிகவும் அவசியமான , இருந்தே ஆக வேண்டிய பண்பு ஆகும். வலி என்பது மூளை ஏற்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் உடலின் ஓர் அறிவிப்பும் ஆகும். வலி மிகவும் அவசியமான தகவமைப்பு உணர்வே ஆகும். வாந்தி , காய்ச்சல் , இருமல் போன்று வலியும் ஓர் அறிகுறியே. நாம் ஓட்டும் சைக்கிளை சரியாக பராமரிக்கத் தவறினால் அதன் பகுதிப் பொருள் உராய்ந்து சிறு ஒலி ஏற்படுத்துமே அதுபோல் வலி என்பது உடல் உறுப்பு தன்னைக் கவனிக்க வேண்டுமென்று எழுப்பும் ஓசையே ஆகும்.

வலியை பொருட்படுத்தாவிட்டால் , வலியின் தன்மையும் , தீவிரமும் அதிகமாகி செயலியல் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. புற்றுநோயின் ஆரம்ப காலத்தில் வலி எனும் அறிகுறி இல்லாமையால்தான் நோயின் தீவிரத் தன்மையை புறக்கணிக்கப்பட்டு , முற்றிய நிலையில் உண்டாகும் வலியால் பாதிக்கப்படும் நிலை உருவாகிறது. வலியை உணர்வதற்கான உணர்ச்சி ஏற்பி , நரம்புமுனை , உணர் உறுப்புகள் அடித்தோல் , தசை , எலும்பு , ரத்தநாளங்கள் , உள்ளுறுப்புகள் ஆகியவற்றில் உள்ளன. இந்த உணர்ச்சி மையங்கள் , வலிக்கான உணர்வுத் தூண்டுதலைப் பெற்று புற எல்லை நரம்புகள் வழியாக மைய நரம்பு மண்டலத்திற்கு ( மூளை , தண்டுவடம் ) அந்த வலி உணர்வைக் கடத்தி வலியை உணர வைக்கின்றன. வலியின் தன்மையும் , பிரதிபலிப்பும் வெளிப்படுத்தும் பாங்கும் ஒருவரின் ( அல்லது ) உயிரின் சூழ்நிலை , மனநிலை , உடற்செயலியல் தன்மை பொறுத்து மாறுகின்றன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி