10, 12 வகுப்புகளுக்கு தேர்வு கட்டாயம் நடத்தப்படும் - CBSE! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 29, 2020

10, 12 வகுப்புகளுக்கு தேர்வு கட்டாயம் நடத்தப்படும் - CBSE!


கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது . இதனால் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன . 10 மற்றும் 12 ஆம் வகுப்பு உட்பட சில தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன .

இதனிடையே , தமிழகத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது . மேலும் 10 வகுப்பு பொதுத்தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.

 ஆனால் தேர்வுகள் கண்டிப்பாக நடக்கும் என முதலமைச்சர் உறுதியாக தெரிவித்தார் . மேலும் , எப்போது பள்ளிகளைத் திறக்கலாம் என்பது கொடர்பாக ஒரு குழு அமைத்து , ஆய்வு மேற்கொண்ட பின்னர் அறிவிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

இந்நிலையில் , பொது முடக்கம் முடிந்த பின் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கட்டாயம் நடக்கும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது . போதிய கால அவகாசம் இருப்பதால் தேர்வுகளை ரத்து செய்யும் திட்டம் இல்லை எனவும் தெரிவித்துள்ளது .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி