தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவு 21 - ந்தேதி பள்ளிக்கு வர வேண்டும் ! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 18, 2020

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவு 21 - ந்தேதி பள்ளிக்கு வர வேண்டும் !


அனைத்து பள்ளி ஆசிரியர்களும் வருகிற 21 - ந்தேதி பணிக்கு வர வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது .

இதன் காரணமாக , தனியார் பள்ளி நிர்வாகங்களும் , தங்கள் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை பணிக்கு திரும்ப சொல்லி செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பி வருகின்றனர்.

 அதில் , ஆசிரியர்கள் வெளி மாநிலங்கள் , மாவட்டங்களில் இருந்தால் உடனடியாக ஆன்லைனில் அனுமதி பெற்று பணிக்கு 21 - ந் தேதிக்குள் திரும்ப வேண்டும் .

முதன்மை கல்வி அலுவலர்களுக்கு வருகைப்பதிவேடு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே அதற்கு தயாராகுங்கள் ' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்த திடீர் அறிவிப்பால் தனியார் பள்ளி ஆசிரியர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் , விழிபிதுங்கி போய் இருக்கின்றனர் .

மேலும் , ஊரடங்கு காலத்தில் பொது போக்கு வரத்துக்கு தடை உள்ள நிலையில் , எப்படி பணிக்கு வருவது ? என்று புலம்பி வருகின்றனர் .

23 comments:

  1. இந்த உத்தரவை எல்லாம் உடனே பின்பற்றுகிறார்கள் . ஆனால் ஊதியம் வழங்குமாறு உத்தரவிட்டீர்கள் அதை ஏன் அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை . இதுதான் அரசின் உத்தரவிற்கு தனியார் நிர்வாகத்தினர் அளிக்கும் மதிப்பா ????

    ReplyDelete
  2. ஆசிரியர்களின் சிரமங்களை அரசே கண்டுகொள்வதில்லை. தனியார் பள்ளிகள் எப்படி மதிக்கும்.

    ReplyDelete
  3. மேலே கூறப்பட்ட கருத்து உண்மையானது, ஏனெனில் நான் பணிபுரியும் பள்ளியில் பிப்ரவரி மாதத்தில் இருந்து ஊதியம் வழங்கப்பட வில்லை

    ReplyDelete
  4. அரசு உத்தரவு மதிக்க தக்கது ஆனால் தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஏப்ரல் மாதம் சம்பளம் பெற்றார்க ளா என்று கவனிக்க தவறவிட்டது வருத்தம் அளிக்கிறது

    ReplyDelete
  5. தனியார் பள்ளிகள் ஏப்ரல் மாத சம்பளங்கள் இன்னும் வழங்கவில்லை.......... எல்லோருக்கும் குடும்பங்கள் உண்டு என்று அவர்கள் தெரியாதா......

    ReplyDelete
  6. தனியார் பள்ளிகள் கோடிக் கணக்கில் வைத்து கொண்டு 5,000 சம்பளத்தை கூட கொடுக்க கஞ்சத்தனம் செய்கிறார்கள்....... படித்து பட்டம் பெற்றும் கஷ்டப் பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்......இதை கவனியுங்கள் தமிழக அரசே

    ReplyDelete
  7. திருடர்களிடம் நாயம் கேட்டால் எப்படி...

    ReplyDelete
  8. Unmaithan namparkla.Nam valkkai ippati polampiya saka vantiyathan.

    ReplyDelete
  9. தனியார் பள்ளிகள் சம்பளம் செலுத்திய வங்கி தகவலை அரசு/அதிகாரிகள் கேட்டாலே போதும்.தனியார் பள்ளி (ஆசிரியரின்) நிலை தெரியும்.உண்மையான அரசு/அதிகாரிகள் எவரேனும் இருந்தால் நிச்சயம் இதற்கு தீர்வு கிடைக்கும்.இறைவனை பிரார்த்தனை செய்வோம்...

    ReplyDelete
  10. Govt should monitor wheather private school management give the salary for teachers.

    ReplyDelete
  11. Engal palliyilum salary podala

    ReplyDelete
  12. பட்டம் படித்து 3 பிச்சை எடுக்கிறோம்

    ReplyDelete
    Replies
    1. Idha solla vetkama illa ahadvan kai kalu kodukala ..poai kaikari sales pannu...4 goat vangi market la sales pannuda..edhumay unnala mudiyula soluringa neeyalam oru teacher kevalama irruku poai Vera edhvdhu velai irrudha paru da ..illa vaa pitchai podura

      Delete
    2. தயவு செய்து அநாகரிக வார்த்தை வேண்டாம். வேறு எந்தத் தொழில் செய்பவர்களும் வேறு தொழிலை செய்யலாம். But ஆசிரியர்கள் செய்தால் சமூதாயத்தில் அய்யோ பாவம் என்ற சொல்... இதில் யார் மீது குறை சொல்வது.. வேண்டாம்.. இது அவர்களின் ஆதங்கம்.. நிச்சயம் இந்த நிலை மாறும்...?

      Delete
  13. பணி நீக்கம் செய்து உள்ளார்களே அது தெரியுமா?

    ReplyDelete
  14. பல்வேறு தனியார் கல்லூரிகளிலும் மார்ச முதல் சம்பளம் வழங்கப்படவில்லை. நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் தலையிட வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. Oru two month salry tharalinavay adha vitu tu Vera job ku poai irrukalam orutha one year salary tharala nee enna kumutaiya illa pithiyama...adha vita Vera nadhi illanu irrudhu irrupa unnamathiri alunga first photo eduthu katta veandum lusu madiya

      Delete
    2. யாரை குறைசொல்வது... கடைசி வரை வரும் வரும் என்று ஏமாந்த ஆசிரியரையா? அல்லது கொடுக்காத நிர்வாகத்தையா? அவர் மற்ற வேலை போன்று இடையில் எங்கும் சேர முடியாது... குடும்ப சூழல் வேறு என்ன செய்வது.... ஆசிரியர் பயிற்சி முடித்தாலே பணம் சம்பாதிக்கும் வழி முறை இருந்தால் அவர்கள் ஏன் அங்கு செல்லப் போகிறார்கள்.. சிந்தித்துப் பாருங்கள் அவர்களின் வலி புரியும்..

      Delete
  15. எனக்கு தெரிந்து ஒரு தனியார் கல்லூரியில் ஒரு வருடமாக ஊதியம் வழங்கப்படவில்லை.

    ReplyDelete
  16. மார்ச் பாதி ஊதியம் ஏப்ரல் மாத ஊதியம் வழங்காததை அரசு இன்னும் கவனத்தில் கொள்ளவில்லை. முதலில் அதை செய்யுங்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி