ஜேஇஇ முதல்நிலைத் தேர்வுக்கு மே 24 வரை விண்ணப்பிக்கலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 21, 2020

ஜேஇஇ முதல்நிலைத் தேர்வுக்கு மே 24 வரை விண்ணப்பிக்கலாம்


ஜேஇஇமுதல்நிலைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மே மாதம் 24-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படு வதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. நிகழாண்டு ஏப்ரலில் நடைபெறவிருந்த ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு, கரோனாபாதிப்பு காரணமாக ஜூலை 3-ஆவது வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

 இந்தநிலையில் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) வெளியிட்ட அறிவிப்பு:

மாணவர்களின் கோரிக்கையை ஏற்று ஜேஇஇ முதல்நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு தரப்படுகிறது. இதுவரை விண்ணப்பிக்காத அல்லது விண் ணப்பங்களை முறையாக பதிவேற்றம் செய்யாத மாணவர்கள் வரும்மே 24-ஆம் தேதிக்குள்https://nta.ac.in/என்ற இணையதளம் வழி யாக விண்ணப்பிக்கலாம். இது இறுதிவாய்ப்புஎன்பதால் மாணவர் கள் கவனமுடன் செயல்பட வேண்டும். தினமும் மாலை 5 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.தேர்வுக் கட்டணத்தை இரவு 11.50 மணி வரை செலுத்தலாம்.

அதே போல், விண்ண ப்பங்களில் மே 25 முதல் 31-ஆம் தேதிக்குள் தேர்வு மையம் உள்பட விவரங்களை மாற்றிக் கொள்ளலாம். இதில் ஏதே னும் சந்தேகங்கள் இருந்தால் 8287471852,8178359845, 9650173668, 9599676953, 8882356803 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி