அண்ணா பல்கலை . க்கு மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து தராவிட்டாலும் , தேவை யான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்து கொடுக்கும் என்று அமைச்சர் கே . பி . அன்பழகன் தெரிவித்தார் .
உயர்கல்வி நிறுவனங்களை மேம்படுத்த ' உயர் சிறப்பு கல்வி நிறு வனம் '
( இன்ஸ்டிடியூசன்ஸ் ஆப் எ மினென்ஸ் ) திட்டத்தை மத்திய அரசு 2017 - ல் கொண்டு வந்தது . இத்திட்டத்தின்கீழ் தேர்வாகும் கல்வி நிறுவனங்களின் மேம்பாட்டுக்கு ரூ . 1 , 000 கோடி நிதியுதவி மற்றும் பல்வேறு சலுகைகள் தரப்படும் . அதன்படி தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு அந்தஸ்து பெற தேர்வானது .
இதுகுறித்து ஆராய்ந்து முடிவெடுக்க உயர்கல்வி உட்பட 5 துறை அமைச்சர் கள்மற்றும் 3 செயலர்கள் கொண்ட குழுவை உயர்கல்வித்துறை அமைத்தது.
அந்தஸ்து பெறுவதற்கான ஒப்புதலை மே 31 - ம் தேதிக்குள் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு காலக்கெடு விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின .
இதுகுறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கே . பி . அன்பழகன் கூறியதாவது : அண்ணா பல்கலைக் கழக சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் மத்திய அரசு காலக்கெடு எதுவும் விதிக்க இயலாது . இதுதொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட குழு2 முறை தான் கூடியுள்ளது . அதன்பின் ஊரடங்கு காரணமாக ஆலோசனை நடத்தவில்லை . இந்த குழு பரிந்துரையின் அடிப்படையில்தான் இறுதி முடிவெடுக்க முடியும் . எனினும் , இந்த அந்தஸ்தை வேறு யாருக்காவது மத்திய அரசு தந்துவிட்டாலும் , அண்ணா பல்கலை . க்கு தேவையான அனைத்து வசதிகளையும் தமிழக அரசே மேற்கொள்ளும் . இவ்வாறு அவர் கூறினார் .
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி