'இ - பாஸ்' முறையில் திடீர் மாற்றம் கொரோனா பரவலை தடுக்க அதிரடி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 16, 2020

'இ - பாஸ்' முறையில் திடீர் மாற்றம் கொரோனா பரவலை தடுக்க அதிரடி!


'கொரோனா' பரவலை தடுக்கும் வகையில், 'இ - பாஸ்' வழங்கும் அதிகாரம், செல்ல வேண்டிய மாவட்ட கலெக்டர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அவசிய தேவைநாடு முழுதும் ஊரடங்கு அமலில் உள்ளதால், மருத்துவ பரிசோதனை, நெருங்கிய உறவினர் திருமணம் மற்றும் இறப்புக்கு செல்ல விரும்புவோர், 'ஆன்லைன்' வழியேவிண்ணப்பித்தால், அவர்களுக்கு, 'இ - பாஸ்' வழங்கப்படுகிறது.

ஒரு மாவட்டத்தில் இருந்து அவசிய தேவைக்காக, மற்ற மாவட்டம் செல்ல விரும்புவோருக்கு, அவர்வசிக்கும் மாவட்டத்தின் கலெக்டர், 'இ - பாஸ்' வழங்கி வந்தார்.இதனால், மாவட்டத்தில் இருந்து வெளியே செல்லும் நபர்களின் விபரம், அந்த மாவட்ட கலெக்டரிடம் இருந்தது.ஆனால், தங்கள் மாவட்டத்துக்குள் வரும் நபர்கள் குறித்த விபரம், அவர்களுக்கு தெரிவதில்லை. எனவே, மாவட்டத்திற்குள் வந்தவர்களை கண்டறிந்து, கொரோனா பரிசோதனை செய்வது, தனிமைப்படுத்துவது சிரம மானது.

இதை தவிர்ப்பதற்காக, 'இ - பாஸ்' வழங்கும் நடைமுறையில், நேற்றுமுதல், மிகப்பெரிய மாற்றம் செய்யப்பட்டுஉள்ளது.அனுமதி கோர வேண்டும்இதன்படி, விண்ணப்பதாரர், தாங்கள் புறப்படும் மாவட்ட நிர்வாகத்திடம், 'இ - பாஸ்' பெற்ற நிலைமாறி, சென்றடையும் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோர வேண்டும். விண்ணப்பதாரர் செல்ல வேண்டிய மாவட்டத்தின் கலெக்டர் அனுமதி அளித்தால் மட்டுமே, 'இ - பாஸ்' கிடைக்கும்.

இதுகுறித்து, மின்னாளுமை திட்ட அலுவலர்கள் கூறுகையில், 'விண்ணப்பதாரரின் மாவட்டம், சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என, எந்த பட்டியலில் இருக்கிறது என்பதை ஆராய்ந்து, 'இ - பாஸ்'வழங்கும் வகையில், மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 100 சதவீதம் சரியான விண்ணப்பம் மட்டுமே ஏற்கப்படும்' என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி